மாஸ்கோ: தவறி கீழே விழுந்ததில் டிரைவர் பலி... ஆளில்லாமல் ஓடிய மெட்ரோ ரயில்
மாஸ்கோ: மெட்ரோ ரயிலை இயக்கிக் கொண்டிருக்கும் போதே, கீழே விழுந்து டிரைவர் பரிதாபமாக பலியான சம்பவத்தால், டிரைவரின் கட்டுப்பாடு இல்லாமல் ஓடிய மெட்ரோ ரயிலால் மாஸ்கோவில் பரபரப்பு ஏற்பட்டது.
டிரைவரில்லாமல் ஓடும் வாகனங்களை மர்மப் படங்களில் பார்த்திருப்பீர்கள். அது போன்ற சம்பவம் ஒன்று மாஸ்கோவில் நடந்துள்ளது.
டிரைவரில்லாமல் ஓடிய மெட்ரோ ரயிலால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் நடக்கவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

டிரைவர் எங்கே..?
ரஷ்யாவின் தெற்கு மாஸ்கோ நகரில் இருந்து ரியாசன்ஸ்கி புராஸ்பெக்ட் ரெயில் நிலையம் நோக்கி புறப்பட்ட அதிவேக மெட்ரோ ரயிலில் டிரைவர் இல்லாததை எதேச்சையாக கவனித்தார் எதிர்ப்புறம் வந்த ரயிலின் ஓட்டுநர்.

குகை பாதையில் சடலம்...
அதிர்ச்சி விலகுவதற்கு முன், ரியாசன்ஸ்கி புராஸ்பெக்ட் மற்றும் குச்மின்கி ரெயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள குகை பாதையில் எதிரே சென்ற ரெயிலின் டிரைவர் தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடப்பதையும் கவனித்தார்.

தகவல்....
உடனடியாக, இதுதொடர்பாக ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார் அந்த மற்றொரு ரயிலின் டிரைவர்.

ஆட்டோமேட்டிக் பிரேக் சிஸ்டம்...
அதனைத் தொடர்ந்து, துரித கதியில் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் டிரைவர் இல்லாமல் சென்ற ரயிலை 'ஆட்டோமேட்டிக் பிரேக் சிஸ்டம்' மூலம் ரியான்ஸ்கி புராஸ்பெக்ட் நிலையத்தில் நிறுத்தினர்.

விபத்தா? சதியா?
ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து டிரைவர் கீழே விழுந்து இறந்ததின் பிண்ணனி விபத்தா அல்லது சதி செயல் காரணமா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அஜாக்கிரதை ஏன்?
டிரைவர் பகுதி கதவு திறந்திருந்த காரணத்தால், ஓட்டிக் கொண்டிருக்கும் ரெயிலில் இருந்து கீழே விழும் அளவிற்கு அந்த டிரைவர் அஜாக்கிரதையாக இருந்தது ஏன்? என்ற கோணத்திலும் ரயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications