“ஹமாஸ் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.. இல்லாவிட்டால்..” அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய எச்சரிக்கை!
வாஷிங்டன்: ஹமாஸ் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும், மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்தவொரு விளைவையும் நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே போர் நடக்கிறது. கடந்த 2023, அக்டோபர் 7 ஆம் தேதி துவங்கிய இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர, 20 அம்ச அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். இதை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். ஆனால், ஹமாஸ் தரப்பில் யோசிக்க நேரம் கேட்கப்பட்டது.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் உருவாக்கப்பட்ட அமைதித் திட்டம் இறுதியாக நடைமுறைக்கு வர உள்ள நிலையில், காசா மீதான தொடர்ச்சியான குண்டுவீச்சை இஸ்ரேல் நிறுத்தியது. ஹமாஸ் அமைப்புக்கு அதிபர் டிரம்ப் ஒரு எச்சரிக்கையை விடுத்தார்.
மத்திய கிழக்கு பகுதியில் ஏதேனும் ஒரு வழியில் நமக்கு அமைதி ஏற்பட வேண்டும். ரத்தம் தெறிக்கும் வன்முறை முற்று பெற வேண்டும். ஹமாஸ் வசம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும். அதில் உயிரிழந்தவர்களின் உடலையும் ஒப்படைக்க வேண்டும். முக்கியமாக ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் உடன்பட வேண்டும்.
அந்த ஒப்பந்தம் உலகத்தின் பார்வைக்கு பகிரப்படும். இதுவே ஹமாஸுக்கு கடைசி வாய்ப்பு. இதற்கு உடன்படவில்லை என்றால் அவர்களுக்கு எதிராக மிக தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும். அது இதுவரை யாரும் காணாத நரகமாக அமையும்." என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
டிரம்ப்பின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பானது தன் வசமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்கத் தயார் என்றும், உடனடியாக அமைதிப் பேச்சுவார்த்தையை மத்தியஸ்தர்கள் மூலம் முன்னெடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தது. இந்நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு அதிபர் டிரம்ப் ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிணைக்கைதிகள் விடுதலை மற்றும் அமைதி ஒப்பந்தம் முடிவடைய ஒரு வாய்ப்பை வழங்குவதற்காக இஸ்ரேல் குண்டுவெடிப்பை தற்காலிகமாக நிறுத்தியதற்கு நான் நன்றி கூறுகிறேன்.
ஹமாஸ் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும். பலர் நினைக்கும் தாமதத்தையோ அல்லது காசா மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்தவொரு விளைவையோ நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். இதை விரைவாகச் செய்வோம். அனைவரும் நியாயமாக நடத்தப்படுவார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
ஈரானின் முக்கிய அணுசக்தி விஞ்ஞானியை கொன்றுவிட்டோம்.. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு -
37வது அலை தாக்குதலை தொடங்கிய ஈரான்.. இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. சிக்கலில் இஸ்ரேல்! -
ஈரான் உச்ச தலைவர் சொன்ன மறுகணமே.. சீறி பாய்ந்த ஏவுகணைகள்! இஸ்ரேல் மீது 42வது அலை தாக்குதல் தொடங்கியது -
அமெரிக்க'மாப்பிள்ளை சார்'.. டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர்..ஈரான்- இஸ்ரேல் மோதல் பின்னணி -
உலகெங்கும் ஸ்லீப்பர் செல்களுக்கு போன மெசேஜ்.. ரகசியமாக ஈரானில் இருந்து பறந்த சிக்னல்.. பதற்றம்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி












Click it and Unblock the Notifications