“ஹமாஸ் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.. இல்லாவிட்டால்..” அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய எச்சரிக்கை!
வாஷிங்டன்: ஹமாஸ் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும், மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்தவொரு விளைவையும் நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே போர் நடக்கிறது. கடந்த 2023, அக்டோபர் 7 ஆம் தேதி துவங்கிய இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர, 20 அம்ச அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். இதை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். ஆனால், ஹமாஸ் தரப்பில் யோசிக்க நேரம் கேட்கப்பட்டது.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் உருவாக்கப்பட்ட அமைதித் திட்டம் இறுதியாக நடைமுறைக்கு வர உள்ள நிலையில், காசா மீதான தொடர்ச்சியான குண்டுவீச்சை இஸ்ரேல் நிறுத்தியது. ஹமாஸ் அமைப்புக்கு அதிபர் டிரம்ப் ஒரு எச்சரிக்கையை விடுத்தார்.
மத்திய கிழக்கு பகுதியில் ஏதேனும் ஒரு வழியில் நமக்கு அமைதி ஏற்பட வேண்டும். ரத்தம் தெறிக்கும் வன்முறை முற்று பெற வேண்டும். ஹமாஸ் வசம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும். அதில் உயிரிழந்தவர்களின் உடலையும் ஒப்படைக்க வேண்டும். முக்கியமாக ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் உடன்பட வேண்டும்.
அந்த ஒப்பந்தம் உலகத்தின் பார்வைக்கு பகிரப்படும். இதுவே ஹமாஸுக்கு கடைசி வாய்ப்பு. இதற்கு உடன்படவில்லை என்றால் அவர்களுக்கு எதிராக மிக தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும். அது இதுவரை யாரும் காணாத நரகமாக அமையும்." என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
டிரம்ப்பின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பானது தன் வசமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்கத் தயார் என்றும், உடனடியாக அமைதிப் பேச்சுவார்த்தையை மத்தியஸ்தர்கள் மூலம் முன்னெடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தது. இந்நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு அதிபர் டிரம்ப் ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிணைக்கைதிகள் விடுதலை மற்றும் அமைதி ஒப்பந்தம் முடிவடைய ஒரு வாய்ப்பை வழங்குவதற்காக இஸ்ரேல் குண்டுவெடிப்பை தற்காலிகமாக நிறுத்தியதற்கு நான் நன்றி கூறுகிறேன்.
ஹமாஸ் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும். பலர் நினைக்கும் தாமதத்தையோ அல்லது காசா மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்தவொரு விளைவையோ நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். இதை விரைவாகச் செய்வோம். அனைவரும் நியாயமாக நடத்தப்படுவார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications