பாலத்தீனத்தின் தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க 57 இஸ்லாமிய நாடுகள் வலியுறுத்தல்
பாலத்தீன நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க வேண்டும் என 57 இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் "முடிவு செல்லாது" என இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளின் அமைதி பேச்சுவார்த்தை நடவடிக்கையில் இருந்து வாஷிங்டன் விலக வேண்டும் என்பதை இது குறிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் உரையாற்றிய பாலத்தீன அதிபர் அப்பாஸ், "இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒருதலை பட்சமாக செயல்படுவதால்" மத்திய கிழக்கு நாடுகளின் அமைதிக்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதை "ஏற்றுக்கொள்ள முடியாது" எனக் கூறினார்.
டிரம்ப் நிர்வாகத்துடன் ஈடுபட்டிருந்த பாலத்தீனியர்கள் "இந்த நூற்றாண்டுக்கான உடன்படிக்கையை" ஏற்றுக்கொள்ள முயற்சித்தனர். ஆனால் அவர்களுக்கு கிடைத்தது "மிக மோசமான அடி" என்றும் அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்காவின் தனிப்பட்ட முடிவை நிராகரித்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள், இது பாலத்தீன மக்களின் உரிமைக்கு எதிரான "தாக்குதலாக" கருதுவதாக தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளின் அமைதிக்கான முயற்சிகளை அமெரிக்கா "குறைந்து மதிப்பிடுவதாக" குற்றஞ்சாட்டியுள்ள அவர்கள், இந்த முடிவு "தீவிரவாதம் மற்றும் பயங்கரவைதத்தை தூண்டும் வகையில் உள்ளதாக" தெரிவித்துள்ளனர்.
"சட்டத்துக்கு புறம்பான இந்த முடிவை திரும்பப் பெறாமல் இருப்பதற்கான விளைவுகளுக்கு அமெரிக்கா தான் பொறுப்பு" என்று இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூறியுள்ளது.
"பாலத்தீன நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க வேண்டும்" என அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாலத்தீன நகரத்தின் சட்ட நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என ஐ.நா வை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பிற செய்திகள்
- ராஜஸ்தான் முஸ்லிம் கொலை: பொய்ச் செய்திகளால் பரவிய வெறுப்பு காரணமா?
- நாடாளுமன்றத் தாக்குதல்: 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன?
- வட கொரியா மீது அமெரிக்காவின் கடுமை மாறுகிறதா?
- மிரள வைத்த ஐந்து மீட்டர் மலைப் பாம்பு
- இலங்கையில் 'விண்கல் மழை' - வெறும் கண்களால் பார்க்க முடியுமென அறிவிப்பு
-
கண் கொத்தி பாம்பாக காத்திருக்கும் CIA & மொசாட்.. கொஞ்சம் அசந்தாலும் ஈரான் மொத்தமாக சிதஞ்சிடும் -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்















Click it and Unblock the Notifications