காலியாக கிடக்கும் உலகின் அதிஉயரக் கட்டிடம்... மவுனம் காக்கும் வடகொரியா... குழப்பத்தில் மக்கள்!
பியாங்யாங்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற வட கொரியா நாட்டில் உள்ள உலகின் அதிஉயர கட்டிடம், பயன்பாடின்றி காலியாக கிடைப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரிய தலைநகர் பியாங்யாங் நகரில் உள்ளது யக்யாங்கு ஹாட்டல். 105 அடுக்குமாடிகளுடன், பிரமிட் வடிவிலான இந்த ஹோட்டலின் கட்டுமானப்பணிகள் கடந்த 1987 ஆண்டு தொடங்கின.
30 ஆண்டுகள் நடைபெற்ற இந்த ஓட்டலின் கட்டுமான பணிகள் முடிவடைந்துவிட்டன. இருப்பினும் இந்த ஹோட்டல் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

அதிநவீன வசதிகள்...
750 மில்லின் டாலர் செலவில், மூன்றாயிரம் அறைகள், கேசினோ, எட்டு நகரும் அடுக்குமாடிகள், ஐந்து நகரும் ரெஸ்டாரென்டுகள் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது இந்த ஹோட்டல்.

கின்னஸ் சாதனை...
உலகிலேயே மிக உயரமான கட்டிடம் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்தக் கட்டிடம், வடகொரியாவின் மிகப்பெரிய அடையாளமாக திகழும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

குழப்பம்...
ஆனால் கட்டுமானப்பணிகள் முடிந்து சில ஆண்டுகள் ஆன பின்னரும், ஓட்டலை திறக்காதது ஏன் என்ற கேள்வி வடகொரிய மக்கள் உள்பட பலரின் மனதில் எழுகிறது. முன்னதாக கடண்டஹ் 2012ம் ஆண்டு இந்த ஹோட்டல் திறக்கப்படுவதாக இருந்தது. பின்னர் அது 2013ம் ஆண்டாக தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் அதுவும் காரணங்கள் கூறப்படாமல் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான கோபுரம்...
பியாங்யாங் நகரில் விண்ணை முட்டிக்கொண்டு நிற்கும் இந்த ஓட்டலின் பால் பாயின்ட் பென் வடிவிலான கோபுரம், அங்கு வரும் அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைக்கும் ஓர் அதிசயம் ஆகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications