இந்தியாவில் தீவிரவாதிகள் வாலாட்டினால் பாக். மீது தாக்குதல் நடத்த மோடி திட்டம்: அமெரிக்க அதிகாரி பரபர
வாஷிங்டன்: இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் ஏதேனும் நடத்தப்பட்டால், பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்த பிரதமர் நரேந்திரமோடி திட்டமிட்டுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் ராபர்ட் பிளாக்வில் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்னில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள வந்த ராபர்ட் பிளாக்வில் இதுகுறித்து கூறியதாவது: பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்தது. அதன்பிறகு எப்போதெல்லாம் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தாலும், பாகிஸ்தான் மீது ராணுவ பலத்தை பிரயோகிக்க இந்திய பிரதமர்கள் யோசித்தது உண்டு. ஆனால் செயல்படுத்தாமல் பின்வாங்கிவிடுவார்கள்.

ஆனால், இப்போது இந்தியாவின் நிலைப்பாடு வேகமாக மாறியுள்ளது. இப்போதைய பிரதமர் அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் பின்வாங்க மாட்டார் என்று நினைக்கிறேன்.
இந்தியாவில் ஏதாவது ஒரு பெரிய தீவிரவாத தாக்குதல் நடந்து, அதில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டால், நரேந்திரமோடி, தனது ராணுவத்தை பயன்டுத்தி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. மோடியின் குணநலன் மற்றும் இந்தியாவின் மாறியுள்ள பார்வை ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்தால், முந்தைய பிரதமர்களைவிட இந்த விஷயத்தில் இவர் தீவிரமாக இருப்பார் என்றே தெரிகிறது.
முந்தைய பிரதமர்களுக்கும், இப்படிப்பட்ட யோசனையை ராணுவ அதிகாரிகள் வழங்கினார்கள். ஆனால் அந்த பிரதமர்கள் ராணுவ அதிகாரிகள் கூறிய யோசனையை ஏற்கவில்லை. இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே அணு ஆயுத பலம் கொண்டவை என்பதால், இரு நாடுகளும் மோதுவது ஆபத்தில் முடியும். இதை பாகிஸ்தான் புரிந்துகொள்ளும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டின் வெளியுறவு கொள்கைகளுக்கான மூத்த ஆய்வாளர் ஸ்டீபன் சோகென் கூறுகையில், "மும்பை தாக்குதலை போன்ற மோசமான ஒரு தாக்கதல் இனியும் நடக்காது என்று நம்புகிறேன். ஒருவேளை அப்படி நடந்தால், இந்தியாவின் பதிலடி வேறு மாதிரி இருக்கும் என்பது மட்டும் உறுதி. மிக ஆக்ரோஷமான வகையில் பாகிஸ்தானை நோக்கி இந்தியா தாக்குதல் நடத்த தயாராகியுள்ளது. பாகிஸ்தானின் ராணுவ முகாம்களை தகர்ப்பது இந்தியாவின் முதல் இலக்காக இருக்கும்" என்றார்.
-
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து?












Click it and Unblock the Notifications