ஸ்கூலைக் கட் அடித்து விட்டு மோடியைப் பார்க்க வந்த குட்டீஸ்... போட்டோவும் எடுத்துக் கொண்டனர்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஊழியர்களைச் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, அவர்களது குழந்தைகளுடன் உற்சாகமாக புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்.
அமெரிக்க பயணத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பல்வேறு விருந்தோம்பல்கள், சந்திப்புகளில் பிசியாக இருக்கிறார். துணை ஜனாதிபதி ஜோ பிடன் கொடுத்த மதிய உணவு விருந்தில் கலந்து கொண்ட அவர், அதேபோல வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கொடுத்த விருந்திலும் கலந்து கொண்டார்.

மேலும் வாஷிங்டனில், இந்திய அமெரிக்க சமூகத்தினரையும் அவர் சந்தித்து உரையாடினார். இந்தியத் தூதரகத்திற்கு வெளியே கூடியிருந்த இந்தியர்களைப் பார்த்து அவர் கையசைத்தார்.
இந்தியத் தூதரகத்திற்குள் அவர் தூதரக அதிகாரிகளுடன் தனித் தனியாக பேசினார். கை குலுக்கினார். போட்டோவுக்கும் போஸ் கொடுத்தார். தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரையும் அவர் சந்தித்தார். இந்த நிகழ்ச்சியில் தூதர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
மேலும் பல தூதரக ஊழியர்களின் பிள்ளைகள், பள்ளிக்கூடத்தைக் கட் அடித்து விட்டு மோடியைப் பார்க்க வந்திருந்தனர். அவர்களுடனும் ஜாலியாகப் பேசினாராம் மோடி. மோடியுடன் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜும் வந்திருந்தார்.
தற்போது மோடி உபவாசம் இருக்கிறார். இருந்தாலும் அவரது முகத்தில் எந்த சோர்வும் இல்லை. நியூயார்க், ஐ.நா. கூட்டம் ஆகியவற்ற முடித்து விட்டு தற்போது வாஷிங்டனுக்கு வந்துள்ளார் மோடி. பல்வேறு நிகழ்ச்சிகள், சந்திப்புகளுக்கு இங்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்று மேரிலாண்ட் ஆளுநர் மைக்கேல் ஓ மாலியை சந்தித்தார் மோடி. அவரே நேரடியாக மோடியைச் சந்திக்க வந்திருந்தார். நியூயார்க் போயிருந்தபோது அங்கு நியூஜெர்சி ஆளுநர் கிறிஸ்கிறிஸ்டி, தெற்கு கரோலினா ஆளுநர் நிக்கி ஹேலி ஆகியோரும் மோடியைச் சந்தித்தனர்.
-
"இனி அமெரிக்காவுக்கு நேட்டோ தேவையில்லை.." கண்கள் சிவந்த டிரம்ப்.. திடீரென ஆவேசமாக பாய்ந்தார் -
ஈரான் - அமெரிக்கா போருக்கு நடுவே.. யுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு.. ஆலோசித்தது என்ன? -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications