செவ்வாய் கிரகத்துக்கு பறக்கப் போகும் இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் - நாசா தேர்வு
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இடம் பெற்றுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் லட்சியமான செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா செயல்படுத்தி வருகிறது.

அவ்வகையில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப நான்கு வகையான திட்டத்தை கையில் எடுத்துள்ள நாசா 2030 ஆம் ஆண்டிற்குள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை தரையிறக்க திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக 2017 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட்டை நாசா உருவாக்கி வருகிறது. இந்த சாதனை பயணத்திற்காக சுனிதா வில்லியம்ஸ், ராபர்ட், டக்லஸ் ஹர்லி ஆகியோரை தேர்வு செய்துள்ள நாசா அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications