செவ்வாயில் 3 வித்தியாசமான பொருட்களை கண்டுபிடித்த ரோவர்.. நாசாவின் ஆராய்ச்சியில் திருப்பம்
செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அனுப்பிய ரோவர், தற்போது அங்கு சில முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி உள்ளது.
Recommended Video

நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அனுப்பிய ரோவர், தற்போது அங்கு சில முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி உள்ளது. அங்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன் உயிர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை கண்டுபிடித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருக்கிறதா என்று பல காலமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா ஆகியவை இதில் அதிக ஆர்வம் காட்டுகிறது.
இந்த நிலையில் நாசா தற்போது மிக முக்கியமான கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தி உள்ளது. இதுகுறித்து விரிவான ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட உள்ளது.

நாசா ரோவர்
செவ்வாய் கிரகத்திற்கு நாசா ஏற்கனவே ரோவர் அனுப்பி உள்ளது. இதன் பெயர் க்யூரியாசிட்டி. இது செவ்வாய் மீது நகர்ந்து செல்லும் சிறிய வாகனம் ஆகும். இந்த ரோவர் அங்கு சில ஆராய்ச்சிகளை செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. தற்போது செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளை நாசா துரிதப்படுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக பல அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளது.

மொத்தம்
தற்போது செவ்வாய் கிரகத்தில் பூமியில் இருப்பதை போலவே மூன்று பொருட்களை நாசா கண்டுபிடித்துள்ளது. இந்த மூன்று பொருட்களிலும் அதிக அளவில் மீத்தேன் இருந்துள்ளது. பெரும்பாலும் ஒரு காலத்தில் உயிர் இருந்த பொருட்களின் மீதிகளில்தான் மீத்தேன் வாயு இருக்கும் என்பதால், இந்த பொருட்களுக்கு உயிர் இருந்திருக்கலாம், சிறிய செடியோ, புற்களோ இருந்திருக்கலாம் என்று நாசா கூறியுள்ளது.

எப்படி கண்டுபிடித்தது
நாசாவின் ரோவரானது, செவ்வாய் கிரகத்தின் நிலப்பகுதியை தோண்டி இருக்கிறது. ஆனால் பெரிய அளவில் தோண்டாமல், வெறும் 5 சென்டிமீட்டர்தான் தோண்டியுள்ளது. இதில்தான் இந்த மூன்று விதமான பொருட்கள் கிடைத்துள்ளது. இதை வைத்து இன்னும் பல மாதங்களுக்கு ஆராய்ச்சி செய்ய நாசா முடிவெடுத்துள்ளது.

சூப்பர் ஐடியா
இந்த நிலையில் நாசா அமைப்பு சிறிய ரக நானோ ஹெலிகாப்டரை அனுப்ப உள்ளது. 2020ல் இந்த ஹெலிகாப்டர் அனுப்பப்படும் என்று கூறியுள்ளது.இதில் சிறிய ரக கேமராக்கள் உள்ளது. இது ஆராய்ச்சி செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பும். இது 2020ல் ஏவப்பட்டு 2021 செவ்வாயை அடையும். இதனுடன் இதை கட்டுப்படுத்துவதற்காக, ரோவர் ஒன்றும் அனுப்பப்பட உள்ளது. ரோவரின் ஆராய்ச்சிகளை பெரிய அளவில் செய்ய இது உதவும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications