வானத்தில் கரும்புகை.. 2500 பேர் வெளியேற்றம்.. 300மீ உயர குவைத் நேஷனல் வங்கியில் ஏற்பட்ட பெரும் தீ!
நேஷனல் பேங்க் ஆப் குவைத்தில் நேற்று பெரிய தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video

குவைத் சிட்டி: நேஷனல் பேங்க் ஆப் குவைத்தில் நேற்று பெரிய தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
நேஷனல் பேங்க் ஆப் குவைத்தின் தலைமையக கட்டிடம் குவைத்தின் ஷார்க் நகரில் உள்ளது. இந்த கட்டிடம் 300 மீட்டர் உயரம் கொண்ட பெரிய கட்டிடம் ஆகும்.
இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேஷனல் பேங்க் ஆப் குவைத்தில் நேற்று பெரிய தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
[எச். ராஜா விவகாரம்.. அரசு தலைமை வழக்கறிஞருக்கு அதிகாரம் இல்லை.. ஹைகோர்ட் அதிரடி!]
|
தீ பிடித்தது
நேற்று மாலைக்கு மேல் இந்த தீ பிடித்தது. இந்த தீ பிடித்த போது, அதற்குள் 2500 பேர் இருந்துள்ளனர். மேல் மாடியில் பிடித்த தீ சரசர என்று வேகமாக கீழே பரவ தொடங்கியது. அதன்பின் இந்த தீ பக்கத்து கட்டிடம் ஒன்றிற்கு பரவி உள்ளது. ஆனால் தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
|
புகை மண்டலம்
இதனால் அந்த கட்டிடத்தில் இருந்து பெரிய கரும் புகை வந்தது. இந்த கரும் புகை வானத்தை மொத்தமாக நிறைந்தது. இந்த தீ எதனால் ஏற்பட்டது என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அருகில் இறுதி கட்டிடத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
|
வீடியோவாக வெளியானது
இந்த நிலையில் இந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீ காட்டு தீ போல இணையம் முழுக்க பரவியது. பலர் அந்த இடத்திற்கு சென்று புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது.
|
பாதிப்பு இல்லை
இங்கு மிகவும் வேகவேகமாக மீட்பு பணிகள் நடந்தது. இதனால் அங்கு யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. 2500 பேரில் 2 பேருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டு இருக்கிறது. மற்ற எல்லோரும் காயமின்றி மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications