இந்திய பிரதமராக இருந்தாலும் சரி.. 100% வரிக்கு ரெடியா இருங்க! நேட்டோ கொடுத்த பகிரங்க வார்னிங்
வாஷிங்டன்: ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவின் பெயரை குறிப்பிட்டு நேட்டோ எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட், "ரஷ்யாவுடன் தொடர்ச்சியாக வணிகம் செய்யும் பிரேசில், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும்" என்று எச்சரித்துள்ளார். அமெரிக்க செனட் உறுப்பினர்களை சந்தித்த பிறகு, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த மூன்று நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, உக்ரைன் போர் விஷயத்தில் சமாதானமாக போக வலியுறுத்த வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.
ஒருபுறம் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவது செய்துக்கொண்டு, அதே நேரம், போர் குறித்து சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாவிட்டால், மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகளும் 100 சதவீத இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று ரூட் கூறினார். "சீனா, இந்தியா அல்லது பிரேசில் நாட்டின் பிரதமர்கள், அதிபர்களாக இருந்தாலும், இந்த நடவடிக்கைகள் உங்களை கடுமையாக பாதிக்கும்" என்று அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய வரி மிரட்டல்
உக்ரைனுடன் 50 நாட்களுக்குள் சமாதான ஒப்பந்தம் எடுக்கப்படாவிட்டால், ரஷ்ய ஏற்றுமதிகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும் ரஷ்ய எண்ணெய்யை வாங்கும் நாடுகளுக்கு இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். அதாவது "இது மிகவும் மோசமான முடிவாக இருக்கும்" என்று டிரம்ப் எச்சரித்திருந்தார்.
செனட் ஒப்புதல் இல்லாமல் கூட இரண்டாம் நிலை வரிகளை அமல்படுத்த முடியும் எனவும், இது ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளை கடுமையாக பாதிக்கும் என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார்.
இந்தியாவின் நிலைமை
இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை அதிக அளவில் வாங்கி வருகிறது. நாம் மட்டுமல்ல சீனா மற்றும் துருக்கி ஆகியவையும் எண்ணெய்யை வாங்கி வருகிறது. இப்படி இருக்கையில் ரஷ்யாவை மேற்கோள் காட்டி இந்தியாவுக்கு வரி விதிக்கப்பட்டால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இது எரிசக்தி விநியோகத்தை பாதித்து, உலகளாவிய விலைகளை மேலும் உயர்த்தும் அபாயத்தை உருவாக்கும்.
வரி விஷயத்தில் மட்டுமல்லாது மற்ற சில விஷயங்களிலும் அமெரிக்கா தீவிரமாக இருக்கிறது. ரஷ்ய விமானத் தாக்குதல்களை எதிர்கொள்ள மேம்பட்ட ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா முடிவெடுத்திருக்கிறது. இதனால் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் வணிகத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் இது குறித்து கூறுகையில், ""அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன், ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது. ஆனால் எச்சரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று தெரிவித்தார். மேலும் இது எந்த தீர்வையும் வழங்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications