கருப்புப் பெட்டி ஒலி வந்த இடத்தில் நீரில் மூழ்கி விமானத்தை தேடும் கடற்படை வீரர்கள்
Subscribe to Oneindia Tamil

இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தை 26 நாட்டு கப்பல்கள், விமானங்கள் தேடி வருகின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் கடலில் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கண்டறிந்தது. அந்த ஒலி 2 மணிநேரத்திற்கும் மேலாக வந்துள்ளது.
இதையடுத்து ஒலி வந்த இடத்தில் விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கடற்படை வீரர்கள் நீரில் மூழ்கி விமானத்தை தேடி வருகிறார்கள். முன்னதாக சீன கப்பலும் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கண்டறிந்தது.
விமானம் மாயமாகி இன்றுடன் ஒரு மாதம் முடிகிறது. ஆனாலும் இதுவரை விமானம் குறித்த எந்த ஒரு உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications