மாதேசிகள் போராட்டம் எதிரொலி... நேபாளத்தில் இந்திய டிவி சேனல்கள் முடக்கம்
காத்மாண்டு: நேபாளத்தில் மாதேசிகள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள இந்திய டி.வி. சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என இந்தியா கூறி உள்ளது.
நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புதிய அரசியல் சாசன சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அங்குள்ள மாதேசிகள் எனப்படும் இந்திய வம்சாவளி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. புதிய அரசியல் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் தொடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இந்தியாவில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகளை அவர்கள் நேபாளத்துக்குள் அனுமதிகாமல் எல்லையிலேயே தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் நேபாளத்தில் எரிபொருள் உள்பட அத்தியாவசியப்பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சீனாவிடம் இருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களை நேபாளம் பெற்று வருகிறது.
மாதேசிகளின் போராட்டத்துக்கு இந்தியா துணை நிற்பதாகவும், இதன்மூலம் மறைமுகமான பொருளாதாரத் தடையை இந்தியா அறிவித்துள்ளதாகவும் நேபாளம் கருதுகிறது. இதனால் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களும் நேபாளத்தில் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அங்குள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், இந்திய டி.வி. சேனல்கள் அனைத்தையும் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி முடக்கி விட்டனர்.
இதனால் இந்திய வம்சாவளி மக்கள் தொலைக்காட்சி பார்க்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்னை குறித்து நேபாளத்துக்கான இந்திய தூதர் ரஞ்சித் ரே கூறும்போது,
நேபாளத்தில் நடைபெற்றுவரும் இந்த பிரச்சனை கவலை அளிப்பதாக உள்ளது. இது அரசியல் உள் நோக்கம் கொண்டதாகக் கருதப்படுவதால் இப்பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் உடனடியாக தீர்வு காண வேண்டும். இதனை ஊக்குவிப்பது இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் சம அளவில் கேடு விளைவிக்கும்.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து நேபாளத்தில் தவறான அபிப்பிராயம் உள்ளது. இதற்கு உடனடியாக தீர்வு காணாவிட்டால், அது கடும் விளைவுகளை ஏற்படுத்தி விடும். நேபாளம்- இந்தியாவிற்கு இடையேயான சுமூக உறவுக்கு இது மிகவும் முக்கியம் என்று அவர் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications