“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை!
காத்மாண்டு: நேபாளாத்தின் புதிய பிரதமராக தேர்வாகியிருக்கும் பாலன் ஷா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்தியாவின் எல்லையை நாங்கள் ஆக்கிரமித்திருக்கிறோம் என்று கூறியிருப்பது, அவருக்கு எதிரான விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது.
லிபுலேக், லிம்பியதுரா மற்றும் காலாபானி ஆகிய எல்லைப் பகுதிகள் தொடர்பாக இந்தியா மற்றும் நேபாளம் இடையே நீண்ட காலமாகத் எல்லைப் பிரச்சனை நீடித்து வருகிறது. இப்படி இருக்கையில், இந்திய எல்லையை ஆக்கிரமித்திருப்பதாக பிரதமர் ஒப்புக்கொண்டிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் பாலன் ஷா, “நான் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு தான் ஓர் அதிர்ச்சியூட்டும் உண்மையை அறிந்துகொண்டேன். இந்தியா மட்டுமல்ல, நேபாளமும் பல இடங்களில் இந்திய எல்லையை ஆக்கிரமித்துள்ளது. எனவே இரு நாடுகளும் நண்பர்களாக அமர்ந்து உண்மைகளை ஆராய்ந்து இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்” என்று பேசினார்.
எல்லையை நேபாளம் ஆக்கிரமித்துள்ளதாக அதன் நாட்டின் பிரதமரே நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டது நேபாளத்தில் பெரும் அரசியல் விவாதத்தைக் கிளப்பியது. பிரதமரின் இந்தக் கருத்து நேபாளத்திற்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் உடனடியாக ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டது.
அதில், பிரதமர் 'ஆக்கிரமிப்பு' எனக் குறிப்பிட்டது அதிகாரப்பூர்வ நிலப்பரப்புரிமையை அல்ல. இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட 'நோ-மேன்ஸ் லேண்ட்' எனப்படும் மனிதர்கள் நடமாடக் கூடாத எல்லைக் கோட்டுப் பகுதி மற்றும் எல்லைத் தூண்கள் சேதமடைந்துள்ள சில இடங்களில் இரு நாட்டு விவசாயிகளும் எல்லையைக் கடந்து விவசாயம் செய்வதைக் குறிப்பிட்டுத்தான் பிரதமர் அவ்வாறு பேசினார் எனத் தெளிவுபடுத்தியது.
இந்தப் எல்லைப் பிரச்சனை என்பது ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய காலத்திலிருந்தே நீடிப்பதால், இதில் பிரிட்டன் அரசாங்கமும் அக்கறை காட்ட வேண்டும் எனப் பிரதமர் பாலன் ஷா வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து இந்தியா, சீனா மற்றும் பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளுடனும் நேபாள அரசு தூதரக ரீதியாகப் பேசியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேபாள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் பிரதமரின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “நேபாளம் ஒருபோதும் இந்திய நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை, பிரதமர் தனது பேச்சுக்கு ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்டுத் தனது பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications