நேபாள நிலநடுக்கம்: 22 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட 4 மாத சிசு குடும்பத்துடன் சேர்ப்பு
காத்மண்டு: நேபாள நிலநடுக்கத்தில் கட்டிட இடுபாடுகளில் சிக்கி,பல மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட 4 மாத குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான பக்தபூர் பகுதியில் சில வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, குழந்தையின் அழுகுரல் வீரர்களுக்கு கேட்டது. இதையடுத்து, அந்த பகுதியில் வீரர்கள் மீட்புப் பணியை துரிதப்படுத்தினர். அப்போது, இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்த குழந்தை ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

பிறந்து 4 மாதமே ஆன அந்த குழந்தைதையை மண்ணுக்குள் இருந்து வெளியே எடுத்தபோது அது வீறிட்டு அழுதது. வீரர்கள் அந்த குழந்தையை சமாதானப்படுத்தி உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அந்த குழந்தையின் பெற்றோரைத் தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டு முகாம் ஒன்றில் தங்கியிருந்த குழந்தையின் பெற்றோரை மீட்புப்படையினர் கண்டுபிடித்தனர். அந்த குழந்தையின் பெற்றோர் ஷ்யாம் அவால் - ரேஸ்மிலா தம்பதியினர் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் குழந்தையை ஒப்படைக்கப்பட்டது.

தங்கள் குழந்தை உயிரோடு இருக்காது என்று எண்ணி அழுது புலம்பிக் கொண்டிருந்த ஷ்யாம்-ரேஸ்மிலா தம்பதிகளுக்கு தங்கள் 4 மாத குழந்தை உயிரோடு கொண்டு வரப்பட்டதை பார்த்து எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர். அவர்கள் கண்ணீர் மல்க குழந்தையை மீட்புப்படையினரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். தாயை கண்ட குழந்தை சிரிப்புடன் அவரிடம் தாவிக் கொண்டது.

குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது குறித்து பெற்றோர் கூறுகையில், எங்கள் குழந்தை மீண்டும் கிடைத்து விட்டான். இந்த உலகிலேயே நாங்கள்தான் மகிழ்ச்சியான தம்பதிகள். ஆனால் என்னால் இதனை இப்பவும் நம்ப முடியவில்லை என்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications