மீண்டும் சீண்டிய நேபாளம்.. பீகார் எல்லையில் திடீர் துப்பாக்கி சூடு.. இந்தியர் படுகாயம்.. பரபரப்பு!
காத்மாண்டு: இந்தியாவில் இருக்கும் நிலப்பரப்பை உரிமை கொண்டாடி வரும் நேபாளம் தற்போது பீகார் எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறது.
இந்தியாவில் இருக்கும் மூன்று பகுதிகளை நேபாளம் தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்தியா நேபாளம் இடையே நடக்கும் இந்த பிரச்சனைக்கு காரணம் லிபு லேக் பகுதிதான்.
அங்கு இந்தியா சாலை அமைத்து சில கட்டுமான பணிகளை மேற்கொண்டது. ஆனால் இந்த சாலைக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இங்குதான் பிரச்சனை தொடங்கியது.

மூன்று இடங்கள்
எல்லையில் லிபு லேக், லம்பியாதூரா, கல்பாணி ஆகிய பகுதிகள் நேபாளுக்கு சொந்தமானது. இங்கு இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்று நேபாளம் பிரதமர் கேபி சர்மா ஒளி தெரிவித்து வருகிறார். இந்த இடங்களை நாங்கள் மீட்டு எடுப்போம் என்று நேபாளம் கூறியது. அதோடு இது தொடர்பாக நேபாளம் மேப் ஒன்றை வெளியிட்டது. இது தொடர்பாக அங்கு சட்ட திருத்தமும் செய்யப்பட்டு இருக்கிறது.

துப்பாக்கி சூடு
இந்த நிலையில் நேபாள போலீஸ் தற்போது பீகார் எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறது. நேபாள போலீசார் கிஷாந்த்கஞ்ச் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. எல்லைக்கு அருகே சென்று கொண்டு இருந்த மூன்று இந்தியர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். காயம் அடைந்த அந்த நபர் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

ஏன் இப்படி
எதனால் இந்த துப்பாக்கி சூடு நடந்தது என்று முழு விபரம் தெரியவில்லை. இந்தியா நேபாளம் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது.முன்னதாக கடந்த மாதம் பீகார் அருகே இந்தியர் ஒருவர் நேபாளம் போலீஸ் மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. பீகார் அருகே சீதமார்கி பகுதியில் இந்த துப்பாக்கி சூடு நடந்து இருக்கிறது. இதில் இந்தியர்கள் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

மீண்டும்
தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் நேபாளம் அருகே அந்நாட்டு போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது . இதை இந்தியா விரைவில் தட்டி கேட்கும் என்று கூறுகிறார்கள். முன்னதாக நேபாளம் பிரதமர் சர்மா ஒலி, ராமர் எங்களுக்கு சொந்தமானவர். அவர் நேபாளத்தில் பிறந்தவர். உண்மையான அயோத்தி என்பது நேபாளத்தில்தான் இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications