ஜெர்மனியில் மோடியை சந்தித்த நேதாஜியின் பேரன்...நேதாஜி பற்றிய ரகசியங்களை வெளியிட வலியுறுத்தல்
பெர்லின்: நேதாஜியின் உறவினர்கள் உளவு பார்க்கப்பட்டது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பெர்லினில் நேதாஜியின் உறவினர் சூர்யகுமார் போஸ், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தேசிய ராணுவத்தை (ஐ.என்.ஏ) தொடங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 18ஆம் தேதி தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் பலியானதாக நம்பப்படுகிறது. இவரது மரணம் பற்றிய ரகசியத்தை வெளியிட வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.

மரணம் பற்றிய ரகசியம்
40 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரித்து வரும் அவரை நேதாஜியை பற்றிய 100க்கும் மேற்பட்ட ரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிடவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. எனினும், இவற்றை வெளியிட்டால், மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும், நமது நட்பு நாடுகள் சிலவற்றுடன் உறவுகள் பாதிக்கப்படும் என்பதால் அந்த கோப்புகள் பகிரங்கமாக வெளியிடப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

உளவு பார்ப்பு
இந்த விபத்துக்கு பின், 1948ஆம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த காலம் முதல் 1968ஆம் ஆண்டு வரை நேதாஜியின் குடும்பத்தினரை உளவு பார்க்கப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நேதாஜியின் நெருங்கிய உறவினர்களான சிசிர்குமார் போஸ் (நேதாஜியின் சகோதரர் மகன்), அமியாநாத் போஸ், அவருடைய ஜெர்மனி நாட்டு மனைவி எமிலி சூசென்கல் ஆகியோர் 1948ஆம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த காலம் முதல் 1968ஆம் ஆண்டு வரை உளவு பார்க்கப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

கண்காணிப்பு வளையத்தில்
இவர்கள் உளவுத்துறையின் வளையத்துக்குள் இருந்தும் உள்ளனர். இவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தாக கூறப்படுகிறது. அண்மையில் அனுஜ் தர் என்னும் எழுத்தாளர் எழுதிய ‘இண்டியாஸ் பிக்கஸ்ட் கவர்-அப்' என்ற புத்தகத்தில் நேதாஜியின் மர்ம மரணம் தொடர்பான இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மோடியுடன் சந்திப்பு
இந்நிலையில் ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள பிரதமர் மோடியை நேதாஜியின் பேரன் உறவான சூர்யகுமார் போஸ் நேரில் சந்தித்து பேசினார். சந்திப்பின் போது சூர்யகுமார் போஸ், பிரதமர் மோடியிடம் நேதாஜி தொடர்பான ரகசிய கோப்புகளை வெளியிடும்படி வலியுறுத்தி உள்ளார். பிரதமர் மோடியும், இவ்விவகாரத்தை முக்கியமானதாக எடுத்துக் கொண்டு பரிசீலனைக்கு பின்னர் முடிவு எடுப்பதாக தெரிவித்து உள்ளார்.

நம்பிக்கை தரும் பதில்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சூர்ய குமார் போஸ் "ஆவணங்களை பார்க்காத நிலையில், வெளிப்படுத்துவது தொடர்பாக தன்னால் முடிந்தவரையில் முயற்சி செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார், ஆவணம் தொடர்பாக தீர்ப்பு அளிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்".

மோடி வாக்குறுதி
இது மிகவும் நேர்மையான பதில் என்று கூறிய சூர்ய குமார் போஸ், இவ்விவகாரத்தை கருத்தில் கொள்வதாகவும், எதாவது செய்வதாகவும் வாக்குறுதியாவது அளித்து உள்ளார். நானும் நம்பிக்கையாக உள்ளேன் என்றார்.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications