“ஹமாஸ் தலைவர் முகமது சின்வாரை கொன்று விட்டோம்..” இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு! முடிவுக்கு வரும் போர்!
ஹமாஸின் காசா தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருக்கிறார். ஹமாஸை ஒழிப்பதுதான் இஸ்ரேலின் நோக்கம் என்று சொல்லப்பட்ட நிலையில், இந்த கொலை போருக்கான முடிவாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
முகமதுவுக்கு முன்னதாக, ஹமாஸின் தலைவராக யஹ்யா சின்வார்தான் இருந்தார். கடந்த அக்டோபர் மாதம் அவர் இஸ்ரேல் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து ஹமாஸின் தலைவராக யஹ்யா சகோதரரும், ஹமாஸ் இயக்கத்தின் படை தளபதிகளில் ஒருவருமான முகமது சின்வார் உயர்த்தப்பட்டார்.

இந்நிலையில் முகமதுவையும் கொன்றுள்ளதாக நெதன்யாகு கூறியிருக்கிறார். இது பற்றி ஹமாஸ் தரப்பில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்த கொலையுடன் பாலஸ்தீனம்-இஸ்ரேல் போர் முடிவுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதியன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் தாக்குதலை தொடங்கியது. அதற்கு முன்னர் வரை ஏராளமான தாக்குதலை காசா மீதும், பாலஸ்தீன மக்கள் மீதும் இஸ்ரேல் தொடுத்து வந்தது. இப்படி இருக்கையில் ஹமாஸின் தாக்குதல் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது. இந்த தாக்குதலை தொடர்ந்து, ஏராளமான இஸ்ரேலியர்கள் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டனர். தாக்குதலில் 1300 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறினாலும் அதற்கான ஆதாரங்களை பொது வெளியில் அது காட்டவில்லை.
இதனையடுத்து ஹமாஸை முற்றிலுமாக ஒழிப்போம் என்று கூறி இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்த போர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில், ஏறத்தாழ 53,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஹமாஸை அழிப்பது மட்டும்தான் தங்களது ஒரே நோக்கம் என்று இஸ்ரேல் கூறி வந்த நிலையில் கடந்த 2024ம் அண்டு அக்டோபரில் அப்போதைய ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரை கொலை செய்தது.
இத்துடன் இந்த போர் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போரை தொடர்ந்து நடத்தியது இஸ்ரேல். இருப்பினும் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக ஐநாவில் தீர்மானத்தை கொண்டு வந்தன. இது அமெரிக்காவுக்கும் சிக்கலை ஏற்படுத்தியது. குறிப்பாக ஹாவர்ட் பல்கலையில் மாணவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தினர். இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுதங்களை கொடுக்க கூடாது என்றும் முழக்கமிட்டனர். இப்படியாக சர்வதேச நெருக்கடி காரணமாக இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது.
3 கட்டங்களாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரு தரப்பிலிருந்தும் பணய கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் 2வது கட்டத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டு வந்தது. எனவே தற்போது போர் தீவிரமடைந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டிருக்கிறார்.
ஹமாஸை ஒழிப்பதுதான் நோக்கம் என்று சொல்லிக்கொள்ளும் இஸ்ரேல், இனியாவது போரை நிறுத்துமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications