நேதாஜியின் ஐ.என்.ஏ. படை தளபதி புவான்ஸ்ரீ ஜானகி அம்மையார் காலமானார்!
கோலாலம்பூர்: இந்திய தேசிய விடுதலை போராட்ட படையின் தளபதியாக பணியாற்றிய புவான்ஸ்ரீ ஜானகி அம்மையார் மலேசியாவில் காலமானார்.
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தலைமையிலான ஐ.என்.ஏ. எனப்படும் இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர்கள் அதிகமிருந்த படைக்கு புவான்ஸ்ரீ ஜானகி ஒரு படைத்தளபதியாக பணியற்றினார்.
இந்தியாவின் விடுதலைக்காக அவர் ஆற்றிய சேவைக்காக 2000ம் ஆண்டில் இந்தியாவின் அன்றைய குடியரசு தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன் டெல்லியில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.
இந்திய விடுதலைக்காக நேதாஜி தலைமை தாங்கி நடத்திய இந்திய தேசிய விடுதலை போராட்டப்படையின் தளபதியாக பணியாற்றிய புவான்ஸ்ரீ ஜானகி அம்மையார் மலேசியாவில் காலமானார். அவருக்கு வயது 93.
அவரது உடலுக்கு மலேசிய இந்திய தூதரக அதிகாரி குருமூர்த்தி, இந்திய தூதரின் பாதுகாப்பு ஆலோசகர் பிரவீன் குமார் உள்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்திய தேசிய ராணுவத்தில் படைத்தளபதியாக பணியாற்றிய வீரமங்கை என்று அவர் மலேசிய மக்களால் பெருமையுடன் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
புவான்ஸ்ரீ ஜானகி அம்மையாருக்கு ஈஸ்வர் என்ற மகனும், கவுரி என்ற மகளும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications