இந்த ஆண்டுக்குள் தேர்தல்.. திடீரென ராஜினாமா செய்த பிரதமர்! இது நெதர்லாந்து கதை - என்னதான் பிரச்சனை?
ஆம்ஸ்டெர்டாம்: நெதர்லாந்து நாட்டில் புலம்பெயர்வோர் எண்ணிக்கையை குறைக்கும் அரசின் முடிவை கூட்டணி கட்சிகள் ஏற்காத காரணத்தால் பிரதமர் பதவியையே ராஜினாமா செய்து இருக்கிறார் மார்க் ருடே.
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் பிரதமராக பதவி வகித்தவர் மார்க் ருடே. அந்நாட்டில் 4 கூட்டணி கட்சிகளின் ஆதரவு ஆட்சி செய்து வருகிறார். நெதர்லாந்து நாட்டில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான ருடே, எதிர்க்கட்சிகளுடனான கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.

150 இடங்களை கொண்ட நெதர்லாந்து நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ருடேவின் இந்த ராஜினாமா முடிவு அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெதர்லாந்து நாட்டுக்கு போர், பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து வருகிறார்கள்.
இவர் அந்நாட்டில் அகதிகளாக தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், இவ்வாறு புலம்பெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்தார் மார்க் ருடே. இதற்கான கொள்கையை வடிவமைத்து புலம்பெயர்வோர் எண்ணிக்கையை குறைக்கும் திட்டத்தை அவர் முன்வைத்தார்.
அவரது இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகளுக்கு முன்னரே கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கின. இந்த கொள்கைக்கு யாரும் ஆதரவளிக்காததால் மார்க் ருடேவின் முயற்சி தோல்வியடைந்தது. இந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய மார்க் ரூடே, "ரகசியம் என்று எந்த விசயமும். புலம்பெயர்வு கொள்கை தொடர்பாக கூட்டணி கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே ராஜினாமா செய்தேன். தேர்தல் நடைபெறும் வரை இடைக்கால காபந்து அரசும் அமைச்சரவையும் தொடரும் என்றார்.
நெதர்லாந்து நாட்டை நாடி வரும் அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 47 ஆயிரம் பேர் கடந்து ஆண்டு அந்நாட்டுக்கு அடைக்கலம் கேட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டோ அடைகலம் கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டும் என்றும் கூறப்படுகிறது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் 200 பேருக்கு மட்டுமே நெதர்லாந்து நாட்டிற்குள் அனுமதி அளிக்க முடியும் என மார்க் ரூடே புலம்பெயர்வு கொள்கையில் மாற்றம் செய்ய முயன்றார். இதற்கு எழுந்த பலத்த எதிர்ப்பின் காரணமாக இன்று பிரதமர் பதவியையே ராஜினாமா செய்யும் சூழலுக்கு அவர் தள்ளப்பட்டு உள்ளார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications