இந்த ஆண்டுக்குள் தேர்தல்.. திடீரென ராஜினாமா செய்த பிரதமர்! இது நெதர்லாந்து கதை - என்னதான் பிரச்சனை?
ஆம்ஸ்டெர்டாம்: நெதர்லாந்து நாட்டில் புலம்பெயர்வோர் எண்ணிக்கையை குறைக்கும் அரசின் முடிவை கூட்டணி கட்சிகள் ஏற்காத காரணத்தால் பிரதமர் பதவியையே ராஜினாமா செய்து இருக்கிறார் மார்க் ருடே.
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் பிரதமராக பதவி வகித்தவர் மார்க் ருடே. அந்நாட்டில் 4 கூட்டணி கட்சிகளின் ஆதரவு ஆட்சி செய்து வருகிறார். நெதர்லாந்து நாட்டில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான ருடே, எதிர்க்கட்சிகளுடனான கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.

150 இடங்களை கொண்ட நெதர்லாந்து நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ருடேவின் இந்த ராஜினாமா முடிவு அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெதர்லாந்து நாட்டுக்கு போர், பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து வருகிறார்கள்.
இவர் அந்நாட்டில் அகதிகளாக தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், இவ்வாறு புலம்பெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்தார் மார்க் ருடே. இதற்கான கொள்கையை வடிவமைத்து புலம்பெயர்வோர் எண்ணிக்கையை குறைக்கும் திட்டத்தை அவர் முன்வைத்தார்.
அவரது இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகளுக்கு முன்னரே கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கின. இந்த கொள்கைக்கு யாரும் ஆதரவளிக்காததால் மார்க் ருடேவின் முயற்சி தோல்வியடைந்தது. இந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய மார்க் ரூடே, "ரகசியம் என்று எந்த விசயமும். புலம்பெயர்வு கொள்கை தொடர்பாக கூட்டணி கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே ராஜினாமா செய்தேன். தேர்தல் நடைபெறும் வரை இடைக்கால காபந்து அரசும் அமைச்சரவையும் தொடரும் என்றார்.
நெதர்லாந்து நாட்டை நாடி வரும் அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 47 ஆயிரம் பேர் கடந்து ஆண்டு அந்நாட்டுக்கு அடைக்கலம் கேட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டோ அடைகலம் கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டும் என்றும் கூறப்படுகிறது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் 200 பேருக்கு மட்டுமே நெதர்லாந்து நாட்டிற்குள் அனுமதி அளிக்க முடியும் என மார்க் ரூடே புலம்பெயர்வு கொள்கையில் மாற்றம் செய்ய முயன்றார். இதற்கு எழுந்த பலத்த எதிர்ப்பின் காரணமாக இன்று பிரதமர் பதவியையே ராஜினாமா செய்யும் சூழலுக்கு அவர் தள்ளப்பட்டு உள்ளார்.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications