விடுதலை புலி தலைவர்கள் சரணடைந்த பின்னர் படுகொலை- புது ஆதாரம் வெளியீடு
சிட்னி: தமிழீழ விடுதலைப் புலி தலைவர்கள் பலர் சரணடைந்த பின்னர் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புதிய ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.
இலங்கை இறுதிப் போரில் புலிகள் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், தளபதி புலித்தேவன், கேணல் ரமேஷ் உள்ளிட்டோர் சிங்கள ராணுவத்திடம் சரண் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் சிங்கள படை வீரர்கள் சித்ரவதை செய்து பின்னர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இது தொடர்பாக புதிய ஆதாரங்களை ஆஸ்திரேலியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இறுதிப் போரின் போது பிரபாகரனின் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவரும், ஆசிரியர் ஒருவரும் இதுதொடர்பான ஆதாரங்களை வழங்கியாக அந் நிறுவனம் கூறியுள்ளது.
"நடேசன் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பலர் வெள்ளை கொடிகளுடன் சிங்கள படையினரிடம் சரண் அடைந்தனர். ஆனால் சரண் அடைந்த சில மணித் துளிகளில் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று பிரபாகரனின் பாதுகாப்பு படை வீரர் கூறியுள்ளார்.
ஆசிரியர் ஒருவர் கூறுகையில், சிங்கள படையால் நான் கைது செய்யப்பட்டேன். பின்னர் வாகனத்தில் என்னை ஏற்றிச் சென்றனர். அப்போது புலித்தேவன், ரமேஷ், நடேசன் ஆகியோர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் பிணமாக கிடந்தனர். அதை பார்த்தேன் என்று கூறியுள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications