For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செவ்வாய் கிரகத்தில் உறைந்து கிடக்கும் நீர்

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: செவ்வாய் கிரகத்தில் நீர் உறைந்த நிலையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் குடியேற ஒரு பக்கம் உலக மக்கள் விண்ணப்பித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் மட்டும் 62க்கும் மேற்பட்டோர் செவ்வாய் கிரகத்தில் குடியேற விண்ணப்பித்துள்ளனர்.

New study suggests frozen water hidden below Mars surface

இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. இதையடுத்து செவ்வாய் கிரகத்தில் நிலபரப்புக்கு கீழ் நீர் உறைந்து கிடப்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

செவ்வாய் கிரத்தில் இருந்த தண்ணீர் விண்வெளியில் வெளியேறிவிட்டது என்றும், மீதமுள்ள நீர் உறைந்து கிடக்கின்றது என்றும் புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. காலப்போக்கில் செவ்வாய் கிரகத்தில் இருந்த நீர் ஆவியாக வெளியேறிவிட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது தவிர செவ்வாய் கிரகத்தில் தற்போதும் ஏராளமான நீர் உள்ளது என்று ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
According to a new research frozen water remains hidden below the surface of mars.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X