நியூயார்க் பூங்காக்களில் சுதந்திரமாக புகைப்பிடிக்க கோர்ட் அனுமதி
Subscribe to Oneindia Tamil
நியூ யார்க்: நியூயார்க் நகரின் பூங்காக்களில் பொதுமக்கள் புகைப்பிடிப்பதற்கான தடை தற்போது ரத்தாகியுள்ளது.
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள பார்கள், உணவகங்கள் , அலுவலகங்களில் புகைபிடிக்க 10 ஆண்டுகளுக்கு முன்னர் தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2011ம் ஆண்டு அந்நகரில் உள்ள 179 பூங்காக்கள், கடற்கரைகள், விளையாட்டு திடல்கள் வரலாற்று சிறப்புமிக்க இடங்களிலும் புகைபிடிக்க கூடாது என உத்தரவிடப்பட்டது.
இதனை எதிர்த்து , கிளாஷ் என்ற அமைப்பு ‘பூங்காக்களில் புகை பிடிக்க தடை விதிக்கும் அதிகாரம் பூங்கா பராமரிப்பு துறையினருக்கு கிடையாது' என கோர்ட்டில் வழக்கு தொடுத்தது.
வழக்கை விசாரித்த நியூ யார்க் மாநில சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜார்ஜ் செரெசியா பூங்காக்களில் புகைபிடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications