ஒரே ஒருத்தர்தான்.. 6 மாத காலத்துக்கு பிறகு "பாசிட்டிவ்".. உடனே லாக்டவுனை போட்ட நியூசிலாந்து
வெலிங்டன்: 6 மாத காலத்துக்கு பிறகு, ஒரே ஒருத்தருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.. உடனே 3 நாளைக்கு முழு லாக்டவுனை போட்டுவிட்டது நியூசிலாந்து அரசு..!
கடந்த வருடம் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பீடித்த நிலையில் நியூசிலாந்தையும் விட்டுவைக்கவில்லை.. பாதிப்பு நிலவரம் ஓரளவு அதிகமாகவே இருந்தது.
ஆனால், அந்நாட்டு அரசு ஆரம்பத்திலேயே விழித்து கொண்டது.. அடுத்த சில மாதங்களிலேயே, உலகிலேயே தொற்றை சிறப்பாக கையாண்ட நாடுகளில் ஒன்று நியூசிலாந்து என்பதை மறுக்க முடியாது..

உயிரிழப்பு
இத்தனைக்கும் வெறும் 50 லட்சம் மக்கள் தொகையைதான் அந்த நாடு பெற்றுள்ளது.. ஆனாலும் தொற்று எப்படியோ பரவிவிட்டது.. அதனால், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, லாக்டவுன்களையும் அமல்படுத்தியது.. உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் தொற்றுக்கு பலியாகிய நிலையில், நியூசிலாந்தில் இதுவரை கொரோனாவுக்கு 26 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்...

பாசிட்டிவ்
அதுமட்டுமல்ல, கடந்த 6 மாதமாகவே அங்கு கொரோனா கேஸ் எதுவும் பதிவாகாமலும் இருந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரே ஒருவருக்கு கொரோனா வந்துவிட்டதாம்.. நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் ஆக்லாந்து என்ற நகரம் உள்ளது.. இங்கு வசித்து வந்த நபருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.. இவருக்கு எந்தவித வெளிநாட்டு தொடர்பும் இல்லாதபோதும் தொற்று எப்படி பரவியது என்று தெரியவில்லை.

அறிவுறுத்தல்
ஒருத்தருக்கு கொரோனா வைரஸ் தாக்கிவிட்டது என்றதுமே, நியூசிலாந்தில் 3 நாட்களுக்கு லாக்டவுன் போட்டுவிட்டார்கள்.. அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து, யாரும் எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டும் உள்ளனர்.. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் ஆக்லாந்து நகரை சேர்ந்தவர் என்பதால் அந்த நகரிலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நபர் சில தினங்களுக்கு முன்பு கோரமண்டல் நகருக்கு சென்று வந்தாராம்.. அதனால் அந்த நகருக்கும் ஒருவாரத்துக்கு லாக்டவுன் போட்டுவிட்டார்கள்... இப்போது அந்த நாட்டில் அந்த நபர் மட்டும் "தனிஒருவராக" தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications