நான்கில் ஒன்னை தொடு: புதிய தேசிய கொடிக்கு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தும் நியூசிலாந்து
வெல்லிங்டன்: நியூசிலாந்துக்கு புதிய கொடியை தேர்வு செய்யும் பணியில் அரசு நியமித்துள்ள குழு ஈடுபட்டுள்ளது.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய கொடிகள் பார்க்க ஒன்று போன்று உள்ளது. இரு நாட்டு கொடிகளில் உள்ள நட்சத்திரங்கள் தான் வெவ்வேறு நிறத்தில் உள்ளன. இதனால் பலநேரம் இரு நாட்டு கொடிகளால் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.
இந்த குழப்பத்தை தீர்க்க நியூசிலாந்து மக்கள் விரும்பினர்.

புதிய கொடி
ஆஸ்திரேலிய கொடி போன்றே இருக்கும் நியூசிலாந்து கொடி வேண்டாம். அதற்கு பதில் புதிய கொடியை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அந்த கோரிக்கையை நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ ஆதரித்தார்.

யோசனை
புதிய தேசிய கொடி எப்படி இருக்க வேண்டும் என்று அரசு மக்களிடமே யோசனை கேட்டது. இதையடுத்து 10 ஆயிரத்து 292 பேர் விதவிதமான டிசைன்களை அரசிடம் சமர்பித்துள்ளனர்.

40 டிசைன்கள்
சமர்பிக்கப்பட்ட 10 ஆயிரத்து 292 டிசைன்களில் இருந்து 40 டிசைன்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரசு நியமித்துள்ள குழு அந்த 40 டிசைன்களில் 4-ஐ தேர்வு செய்ய உள்ளது.

வாக்கெடுப்பு
தேர்வு செய்யப்படும் 4 டிசைன்களில் எதை தேசிய கொடியாக கொள்வது என்பது குறித்து மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. புதிய கொடி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications