நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு
நிக்கோபார் தீவுகளில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ரயில் நிலையத்தில் செல்பி எடுக்க தடை | நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்- வீடியோ
நிக்கோபார்: அந்தமானில் உள்ள நிக்கோபார் தீவுகளில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.0 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ வரை உணரப்பட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சில கட்டிடங்கள் இடிந்துள்ளது.
அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. உயிரிழப்பும் இதனால் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கைவிடுத்து இருக்கிறது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications