Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெனிசுலாவில் கடந்த 12 ஆண்டுகளில் என்ன நடந்தது? நிக்கோலஸ் மதுரா மீது.. டிரம்புக்கு கோபம் ஏன்! விவரம்

Subscribe to Oneindia Tamil

கராகஸ்: வெனிசுலா மீது இன்று அதிகாலை வான்வழி தாக்குதலை நடத்திய அமெரிக்கா, அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கடத்தியிருக்கிறார். அவர் கொலை செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி இருக்கையில், வெனிசுலா அதிபர் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 12 ஆண்டுகளாக வெனிசுலாவின் அதிபராக இருந்த நிக்கோலஸ் என்ன செய்தார்? என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ், வெனிசுலாவின் மக்கள் நலத் தலைவர் ஹியூகோ சாவேஸின் நீண்டகால நண்பர் சாவேஸ் 2013-ல் புற்று நோயால் காலமான பிறகு, இவர் அதிபர் பதவியை ஏற்றார்.

Venezuela US America

பேருந்து ஓட்டுநரும், தொழிற்சங்கத் தலைவருமாக மதுரோ இருந்திருக்கிறார். என்னதாக சாவேஸுடன் மதுரோ நெருங்கி இருந்தாலும், கடந்த 2013ல் இவர் அதிபராகும்போது பெரிய அளவுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. இதைப்பயன்படுத்திக்கொண்ட எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்தவர்கள் அமெரிக்க ஆதரவாளர்களாக இருந்ததால், வெனிசுலாவில் சாவேஸுக்கு பிறகு கம்யூனிஸ ஆட்சி தொடர்வதை அவர்கள் கொஞ்சமும் விரும்பவில்லை. இதுவே அவர்களின் எதிர்ப்புக்கு முக்கிய காரணம்.

எனவே அமெரிக்க மதுரோ ஆட்சிக்காலத்தில் வெனிசுலாவுக்கு மேலும் நெருக்கடியை கொடுத்தது. இதனால், அந்நாட்டில் அமைதியின்மை, பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டது. இந்த பிரச்சனையை எதிர்கொள்ள, எண்ணெய் வளங்களை மதுரோ சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறியதாகவும் குற்றச்சாட்டு இருந்தது.

கடந்த 2017-ல், வெனிசுலா தலைநகர் காரகாஸில் நடந்த போராட்டங்களுக்கு மத்தியில், எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த தேசிய சட்டமன்றத்தை புறக்கணிக்க, ஜனாதிபதியின் அதிகாரங்களை மதுரோ விரிவாக்க முயன்றார். அதன்படி இனி 5 ஆண்டுகள் என்பதற்கு பதில் 6 ஆண்டுகள் அதிபர் ஆட்சியில் இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் 2018ல் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தை தேர்தலை எதிர்க்கட்சித் தலைவர்களும் சர்வதேச சமூகமும் கண்டிக்க, மதுரோ தேர்தலில் நின்று வெற்றி பெற்று 6 ஆண்டு கால பதவிக் காலத்தை வென்றார். ஆனால் சர்வதேச சமூகம் அதை சட்டவிரோதமானது என அறிவித்தது.

2020-ல், டிரம்ப் நிர்வாகத்தால் மதுரோ மீது போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அப்போதைய அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பார், வெனிசுலா ஆட்சி குற்றமும் ஊழலும் நிறைந்தது என்றார். மேலும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, மதுரோ சதி செய்து, டன் கணக்கான கோகைன் அமெரிக்கவுக்குள் அனுப்பி சேதத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார். இதற்கு மதுரோ, டிரம்பை இனவெறியர் எனச் சாடினார். இப்படியாக இரு தலைவர்களுக்கு இடையில் மோதல் இருந்தது.

அண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், மதுரோ வெற்றியாளராக அறிவிக்கப்பட்டபோது, தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த ஜனவரியில் பதவியேற்ற பிறகு, டிரம்ப் நிர்வாகம் மதுரோ ஆட்சிக்கு எதிராக பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தங்களை அதிகரித்தது.

மதுரோவைக் கைது செய்ய தகவல் அளிப்போருக்கு, 50 மில்லியன் டாலர் வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் அறிவித்தார். இதனையடுத்து மதுரோ கைது செய்யப்பட்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+