வெனிசுலாவில் கடந்த 12 ஆண்டுகளில் என்ன நடந்தது? நிக்கோலஸ் மதுரா மீது.. டிரம்புக்கு கோபம் ஏன்! விவரம்
கராகஸ்: வெனிசுலா மீது இன்று அதிகாலை வான்வழி தாக்குதலை நடத்திய அமெரிக்கா, அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கடத்தியிருக்கிறார். அவர் கொலை செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி இருக்கையில், வெனிசுலா அதிபர் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 12 ஆண்டுகளாக வெனிசுலாவின் அதிபராக இருந்த நிக்கோலஸ் என்ன செய்தார்? என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ், வெனிசுலாவின் மக்கள் நலத் தலைவர் ஹியூகோ சாவேஸின் நீண்டகால நண்பர் சாவேஸ் 2013-ல் புற்று நோயால் காலமான பிறகு, இவர் அதிபர் பதவியை ஏற்றார்.

பேருந்து ஓட்டுநரும், தொழிற்சங்கத் தலைவருமாக மதுரோ இருந்திருக்கிறார். என்னதாக சாவேஸுடன் மதுரோ நெருங்கி இருந்தாலும், கடந்த 2013ல் இவர் அதிபராகும்போது பெரிய அளவுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. இதைப்பயன்படுத்திக்கொண்ட எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.
எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்தவர்கள் அமெரிக்க ஆதரவாளர்களாக இருந்ததால், வெனிசுலாவில் சாவேஸுக்கு பிறகு கம்யூனிஸ ஆட்சி தொடர்வதை அவர்கள் கொஞ்சமும் விரும்பவில்லை. இதுவே அவர்களின் எதிர்ப்புக்கு முக்கிய காரணம்.
எனவே அமெரிக்க மதுரோ ஆட்சிக்காலத்தில் வெனிசுலாவுக்கு மேலும் நெருக்கடியை கொடுத்தது. இதனால், அந்நாட்டில் அமைதியின்மை, பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டது. இந்த பிரச்சனையை எதிர்கொள்ள, எண்ணெய் வளங்களை மதுரோ சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறியதாகவும் குற்றச்சாட்டு இருந்தது.
கடந்த 2017-ல், வெனிசுலா தலைநகர் காரகாஸில் நடந்த போராட்டங்களுக்கு மத்தியில், எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த தேசிய சட்டமன்றத்தை புறக்கணிக்க, ஜனாதிபதியின் அதிகாரங்களை மதுரோ விரிவாக்க முயன்றார். அதன்படி இனி 5 ஆண்டுகள் என்பதற்கு பதில் 6 ஆண்டுகள் அதிபர் ஆட்சியில் இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் 2018ல் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தை தேர்தலை எதிர்க்கட்சித் தலைவர்களும் சர்வதேச சமூகமும் கண்டிக்க, மதுரோ தேர்தலில் நின்று வெற்றி பெற்று 6 ஆண்டு கால பதவிக் காலத்தை வென்றார். ஆனால் சர்வதேச சமூகம் அதை சட்டவிரோதமானது என அறிவித்தது.
2020-ல், டிரம்ப் நிர்வாகத்தால் மதுரோ மீது போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அப்போதைய அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பார், வெனிசுலா ஆட்சி குற்றமும் ஊழலும் நிறைந்தது என்றார். மேலும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, மதுரோ சதி செய்து, டன் கணக்கான கோகைன் அமெரிக்கவுக்குள் அனுப்பி சேதத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார். இதற்கு மதுரோ, டிரம்பை இனவெறியர் எனச் சாடினார். இப்படியாக இரு தலைவர்களுக்கு இடையில் மோதல் இருந்தது.
அண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், மதுரோ வெற்றியாளராக அறிவிக்கப்பட்டபோது, தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த ஜனவரியில் பதவியேற்ற பிறகு, டிரம்ப் நிர்வாகம் மதுரோ ஆட்சிக்கு எதிராக பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தங்களை அதிகரித்தது.
மதுரோவைக் கைது செய்ய தகவல் அளிப்போருக்கு, 50 மில்லியன் டாலர் வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் அறிவித்தார். இதனையடுத்து மதுரோ கைது செய்யப்பட்டிருக்கிறார்.
-
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications