நைஜீரியா: பள்ளியை சூறையாடி 59 மாணவர்களைக் கொன்ற தீவிரவாதிகள்
டமடுரு - நைஜீரியா: நைஜீரியாவில் பள்ளிக்குள் புகுந்த தீவிரவாதிகள் உறங்கிக் கொண்டிருந்த 59 மாணவர்களை சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
நைஜீரியாவின் போராளிகள் இயக்கமான போகோ ஹாரம் ஒரு தீவிரவாத இயக்கம் என்றும், அந்நாட்டின் வடக்குப் பகுதியில் ஒரு முஸ்லிம் அரசை உருவாக்குவதற்காக இந்த இயக்கம் கடந்த நான்கரை வருடங்களாகப் போராடி வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேற்கத்திய கல்விக்குத் தடை என்ற கொள்கையுடன் செயல்படும் போகோ ஹாரம் இயக்கத்தினர் நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள பல பள்ளிகளிலும் தொடர்ந்து தங்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
தீவிரவாதிகள் யோபே மாநிலத்தின் தலைநகரான டமடுருவிலிருந்து கிட்டத்தட்ட 60 கி.மீ தொலைவில் உள்ள புனியடி நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் மீண்டும் தாக்குதல் நடத்தினர்.
59 மாணவர்கள் கொலை
கூட்டாட்சி அரசுக் கல்லூரியில் நடைபெற்றுவரும் இந்தப் பள்ளியில் 11 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் தங்கிப் படித்து வந்தனர். அதிகாலை 2 மணியளவில் பள்ளி வளாகத்தினுள் நுழைந்த போராளிகள் அங்குள்ள தங்கும் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 59 மாணவர்கள் உயிரிழந்துவிட்டதாக யோபே பகுதியின் ராணுவ செய்தித் தொடர்பாளரான லாசரஸ் எலி தகவல் தெரிவித்துள்ளார்.
40 கல்லூரி மாணவர்கள்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குஜ்பா மாகாணத்தின் யோபே நகரில் உள்ள விவசாய பயிற்சிக் கல்லூரியில் நடு இரவில் புகுந்த இந்தத் தீவிரவாதிகள் அங்கு தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களைச் சுட்டதில் 40 பேர் பலியாகினர்.
ராணுவக் கிளர்ச்சி
மூன்று வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான யோபேயில்தான் கடந்த மே மாதம் ராணுவம் கிளர்ச்சியாளர்களை அடக்க அரசு பெரும் நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
1000 பேர் படுகெலை
அவசர நிலையை முன்னிட்டு கூடுதலான ராணுவம் அங்கு நிலை நிறுத்தப்பட்டபோதும் இதுவரை 1000க்கும் மேற்பட்ட மக்கள் அந்தப் பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர்.
-
மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஜூன் 4ல் புத்தகம், சீருடை வழங்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications