காஷ்மீர் பிரச்சினை இன்றி பேச்சுவார்த்தை கிடையாது... பாகிஸ்தான் திட்டவட்டம்
இஸ்லாமாபாத் : இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க, ஒப்புக் கொண்டால் மட்டுமே, பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும் என்று, அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சர்தாஜ் அஜீஸ் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
அவர், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி அந்நாட்டு வானொலியில் ஒளிபரப்பப்பட்டது. அதில் சர்தாஜ் அஜீஸ் கூறியதாவது...

இந்தியா - பாகிஸ்தான்., எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதை தணிப்பது குறித்து, இவ்வாரம், இரு நாட்டு எல்லை பாதுகாப்பு தலைவர்கள், பேச்சு நடத்த உள்ளனர்.
அதே சமயம், இரு நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின், பேச்சுவார்த்தைத ரத்தானதற்கு, இந்தியா விதித்த நிபந்தனைகள் தான் காரணம். காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகள் குறித்தும், பேச இந்தியா முன்வந்தால் மட்டுமே, பாகிஸ்தான் பேச்சை தொடர முன்வரும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா - பாகிஸ்தான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம், கடந்த 23 ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருந்தது. இந்த பேச்சுவார்த்தைக்கு வரும்போது, காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான, சர்தாஜ் அஜீஸ் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என, இந்தியா தெரிவித்தது. இந்த நிபந்தனையை, பாகிஸ்தான்., மறுத்ததால், பேச்சுவார்த்தை ரத்தானது.












Click it and Unblock the Notifications