தொலைத்தொடர்பில் புதிய புரட்சி.. இனி செல்போன் டவர்களே இருக்காது.. உலகை திரும்பி பார்க்க வைத்த சீனா!
பீஜிங்: தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக புதிய சாதனை ஒன்றை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்களாம். தரையில் செல்போன் கோபுரங்கள் (டவர்கள்) இல்லாமல் செல்போன்களில் பேசலாம் என்று கூறப்படுகிறது.
உலக அளவில் தொழில் நுட்ப வளர்ச்சியில் அமெரிக்காவுக்கு சவால் கொடுத்து வரும் நாடாக சீனா உள்ளது. வானிலை, சாட்டிலைட், விமானங்கள் என்று பல்வேறு துறைகளிலும் சீனா படுவேகமாக ஆய்வுகளை நடத்தி வருகிறது. விண்வெளியில் தங்களுக்கு எனத் தனியாக விண்வெளி ஆய்வு மையத்தையே கூட அமைத்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

டவர் தேவையில்லை: இந்த நிலையில், தொலைத்தொடர்பு துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் விதமாக ஸ்மார்ட் போன்களை செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கை கோள் மூலமாக பேசும் வசதியை கொண்டு வர சீனா கடந்த சில ஆண்டுகளாக தீவிர ஆய்வு மேற்கொண்டது.
விண்ணுடன் இணைத்தல் என்ற திட்டத்தின் கீழ் Tiantong -1 என்ற செயற்கை கோள்களை அனுப்பி இந்த ஆய்வினை சோதனை மேற்கொண்டது. 2016 ஆம் ஆண்டு முதல் இந்த சோதனனையை நடத்தி வந்த சீனா தற்போது இந்த முயற்சியில் வெற்றி கண்டதாக சொல்லப்படுகிறது.
டைண்டாங் செயற்கை கோள்: அதாவது, ஸ்மார்ட் போன் தகவல் தொடர்பு அமைப்பில், செயற்கைக் கோள் இணைப்பை அடைவதில், சீன விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளார்களாம். இதன்படி, தரையில் செல்போன் கோபுரங்கள் (டவர்கள்) இல்லாமல் செல்போன்களில் பேசலாம் என்று கூறப்படுகிறது. தற்போது டைண்டாங் செயற்கைகோள்கள் மூன்று ஏவப்பட்டுள்ளதாம்.
ஹவாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியது: இதன்மூலம் இது ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் மொபைல் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட்போன்கள் வழியாக பேச முடியும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சேட்டிலைட் அழைப்புகளை சப்போர்ட் செய்யும் உலகின் முதல் போனை ஹவாய் நிறுவனம் அறிமுகப்படுத்திய நிலையில், சீனாவின் இந்த கண்டுபிடிப்பு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இதனால், உலக அளவில் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஸ்மார்ட் போன்களை செயற்கை கோள் வசதியுடன் பேசும் வசதியுடன் கொண்டதாக தயாரிக்க ரெடியாகி வருகிறது.
எந்த இடையூறும் இன்றி பேசலாம்: தரையில் உள்கட்டமைப்பு இன்றி நேரடியாக செயற்கை கோள் மூலமாகவே பேச முடியும் என்பதால், நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது கூட எந்த இடையூறும் இன்றி தொலை தொடர்பு இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அது போக ஊரக பகுதிகளிலும் இது பயனுள்ளதாக இருக்கும் என்பது விஞ்ஞானிகள் கருத்தாக உள்ளது. எனவே, மொபைல் போன்களுக்கான நேரடி செயற்கைக்கோள் இணைப்பு உலகம் முழுக்க பிரபலம் ஆகிவிடும் என்றும் கூறினர்.
-
கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.. அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா! -
அமெரிக்க போர் கப்பல்கள் கண்ணில் மண்ணை தூவிய சீனா.. அசால்டாக ஹார்முஸை கடந்து பயணம்! அது எப்படி -
பாகிஸ்தான் சட்டையை பிடிக்கும் அமீரகம்! "அந்த ₹25,000 கோடியை உடனே திருப்பி தாங்க.." எகிறும் நெருக்கடி -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ்












Click it and Unblock the Notifications