லாஸ்வேகாஸ் துப்பாக்கி சூட்டில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: வெளியுறவுத்துறை
வாஷிங்டன்: லாஸ்வேகாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் மேண்டலே பே ஓட்டல் அருகில் திறந்த வெளியில் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடந்தபோது, அங்கிருந்த உயரமான கட்டிடத்தில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இந்த பயங்கர தாக்குதலில் 406 பேர் படுகாயமடைந்தனர். 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் உலகையே உலுக்கியுள்ள நிலையில், தாக்குதல் நடந்து சில மணி நேரங்கள் கழித்த நிலையில், அந்த தாக்குதலை தாங்கள் நடத்தியதாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.
இதனிடையே இந்தியர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களோ என்ற பதற்றம் இந்தியர்களிடம் காணப்பட்டது.
இதுகுறித்து இந்திய நேரப்படி இரவு 8.10 மணியளவில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்தார். சான்பிரான்சிஸ்கோவிலுள்ள இந்திய தூதரகம் நிலைமையை கண்காணித்து வருகிறது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications