தென் கொரிய மின்னணு பண மையத்தை ஹேக் செய்ததா வட கொரியா?
தென் கொரியாவிலுள்ள மின்னணு பணமான கிரிப்டோகரன்சி பரிமாற்று மையமொன்றில் நடந்த ஹேக்கிங் செயல்பாட்டிற்கு வட கொரியாவே பின்னணியில் உள்ளதாக தென் கொரியாவின் புலனாய்வு அமைப்பு கருத்துத் தெரிவித்துள்ளது.
குறைந்தது 7 மில்லியன் மின்னணு பணம் ஹேக்கிங் செயல்பாட்டின் மூலம் திருடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், தற்போது அப்பணத்தின் மதிப்பு 82.7 மில்லியன் டாலர்களாக இருக்குமென்று கூறப்படுகிறது.
மேலும், 30,000 பேரின் தனிப்பட்ட தகவல்கள் இந்த ஹேக்கிங் மூலம் திருடப்பட்டுள்ளது.
- ஜப்பானில் அதிக நேரம் வேலை செய்பவர்களை வீட்டுக்கு அனுப்பும் ஆளில்லா விமானம்
- கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை எவை? 7 சுவாரஸ்ய தகவல்கள்
மின்னணு பண வகைகளான பிட்காயின் மற்றும் ஈத்திரியத்தை பித்துப் பணப் பரிமாற்று மையத்தில் வர்த்தகம் செய்ததாக தெரிகிறது.
சமீபத்திய வர்த்தக மதிப்புகளின் அடிப்படையில், பித்துப் தென் கொரியாவின் மிகப்பெரிய மற்றும் உலகிலேயே ஐந்தாவது மிகப்பெரிய பெரிய மின்னணு பணப் பரிமாற்று மையமாக திகழ்கிறது.
வட கொரியாவின் அணு ஆயுதம் சார்ந்த செயல்பாடுகளுக்கு தண்டனையாக அளிக்கப்பட்ட நிதித் தடைகளைத் தவிர்ப்பதற்காக வட கொரிய ஹேக்கர்கள் கிரிப்டோகரன்சிகளை இலக்காகக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வர்த்தகர்களின் தனிப்பட்ட தகவலை நீக்குவதற்கு ஹேக்கர்கள் 5.5 மில்லியன் டாலர்களை பித்துப்பிடம் கோரியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செப்டம்பரில் மற்றொரு தென் கொரிய பணப் பரிமாற்று மையமான கோய்னிஸில் நடந்த ஹேக்கிங் செயல்பாட்டின் பின்னரும் வட கொரியாவே இருக்குமென தேசிய புலனாய்வு அமைப்பை சார்ந்த ஆதாரங்கள் நம்புவதாக தென் கொரிய செய்தி முகமையான யோன்ஹாப் தெரிவித்துள்ளது.
ஆனால், அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
அதற்கான ஆதாரங்கள் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கிரிப்டோகரன்சிகள் எனப்படும் மின்னணு பணத்தின் மீது தென் கொரிய நிதி கட்டுப்பாட்டு அமைப்புகள் எவ்வித தடையையும் விதிக்கவில்லை என்றாலும், தற்போது விதிகளை கடுமையாக்கும் முயற்சிகளை எடுக்க தொடங்கியுள்ளது.
பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை காக்க தவறிய பித்துப்பிற்கு தென் கொரிய அரசாங்கம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் 55,000 டாலர்கள் அபராதத்தை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- விண்ணில் பறக்கும் தட்டுகள்: ரகசிய விசாரணை நடத்திய அமெரிக்கா
- கலிஃபோர்னியாவின் மூன்றாவது பெரிய காட்டுத்தீ இதுதான்!
- பிபிசி தமிழ் புகைப்பட போட்டி : மூன்றாவது வாரத்துக்கான தலைப்பு இதோ !
- ராமர் பாலத்தில் யாராவது எப்போதாவது நடந்திருக்கிறார்களா?
- 6.4 லட்சம் டாலர்களுக்கு ஏலம்போன ரோமங்கள் உள்ள யானை எலும்புக்கூடு
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்













Click it and Unblock the Notifications