தென் கொரிய மின்னணு பண மையத்தை ஹேக் செய்ததா வட கொரியா?
தென் கொரியாவிலுள்ள மின்னணு பணமான கிரிப்டோகரன்சி பரிமாற்று மையமொன்றில் நடந்த ஹேக்கிங் செயல்பாட்டிற்கு வட கொரியாவே பின்னணியில் உள்ளதாக தென் கொரியாவின் புலனாய்வு அமைப்பு கருத்துத் தெரிவித்துள்ளது.
குறைந்தது 7 மில்லியன் மின்னணு பணம் ஹேக்கிங் செயல்பாட்டின் மூலம் திருடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், தற்போது அப்பணத்தின் மதிப்பு 82.7 மில்லியன் டாலர்களாக இருக்குமென்று கூறப்படுகிறது.
மேலும், 30,000 பேரின் தனிப்பட்ட தகவல்கள் இந்த ஹேக்கிங் மூலம் திருடப்பட்டுள்ளது.
- ஜப்பானில் அதிக நேரம் வேலை செய்பவர்களை வீட்டுக்கு அனுப்பும் ஆளில்லா விமானம்
- கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை எவை? 7 சுவாரஸ்ய தகவல்கள்
மின்னணு பண வகைகளான பிட்காயின் மற்றும் ஈத்திரியத்தை பித்துப் பணப் பரிமாற்று மையத்தில் வர்த்தகம் செய்ததாக தெரிகிறது.
சமீபத்திய வர்த்தக மதிப்புகளின் அடிப்படையில், பித்துப் தென் கொரியாவின் மிகப்பெரிய மற்றும் உலகிலேயே ஐந்தாவது மிகப்பெரிய பெரிய மின்னணு பணப் பரிமாற்று மையமாக திகழ்கிறது.
வட கொரியாவின் அணு ஆயுதம் சார்ந்த செயல்பாடுகளுக்கு தண்டனையாக அளிக்கப்பட்ட நிதித் தடைகளைத் தவிர்ப்பதற்காக வட கொரிய ஹேக்கர்கள் கிரிப்டோகரன்சிகளை இலக்காகக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வர்த்தகர்களின் தனிப்பட்ட தகவலை நீக்குவதற்கு ஹேக்கர்கள் 5.5 மில்லியன் டாலர்களை பித்துப்பிடம் கோரியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செப்டம்பரில் மற்றொரு தென் கொரிய பணப் பரிமாற்று மையமான கோய்னிஸில் நடந்த ஹேக்கிங் செயல்பாட்டின் பின்னரும் வட கொரியாவே இருக்குமென தேசிய புலனாய்வு அமைப்பை சார்ந்த ஆதாரங்கள் நம்புவதாக தென் கொரிய செய்தி முகமையான யோன்ஹாப் தெரிவித்துள்ளது.
ஆனால், அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
அதற்கான ஆதாரங்கள் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கிரிப்டோகரன்சிகள் எனப்படும் மின்னணு பணத்தின் மீது தென் கொரிய நிதி கட்டுப்பாட்டு அமைப்புகள் எவ்வித தடையையும் விதிக்கவில்லை என்றாலும், தற்போது விதிகளை கடுமையாக்கும் முயற்சிகளை எடுக்க தொடங்கியுள்ளது.
பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை காக்க தவறிய பித்துப்பிற்கு தென் கொரிய அரசாங்கம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் 55,000 டாலர்கள் அபராதத்தை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- விண்ணில் பறக்கும் தட்டுகள்: ரகசிய விசாரணை நடத்திய அமெரிக்கா
- கலிஃபோர்னியாவின் மூன்றாவது பெரிய காட்டுத்தீ இதுதான்!
- பிபிசி தமிழ் புகைப்பட போட்டி : மூன்றாவது வாரத்துக்கான தலைப்பு இதோ !
- ராமர் பாலத்தில் யாராவது எப்போதாவது நடந்திருக்கிறார்களா?
- 6.4 லட்சம் டாலர்களுக்கு ஏலம்போன ரோமங்கள் உள்ள யானை எலும்புக்கூடு
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications