ஆட்டத்தில் வட கொரியா.. காசா ரத்தம் சிந்த இஸ்ரேல் காரணம்! அமெரிக்காவுக்கும் டோஸ் - உலகப்போர் பீதி
பியாங்யாங்: இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே இன்று 5 வது நாளாக போர் தொடர்ந்து வரும் நிலையில், வடகொரியா இது தொடர்பாக கருத்து தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து வடகொரிய ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகமான ரோடாங் சின்முன் வெளியிட்டு உள்ள செய்தியில், "பாலஸ்தீனுக்கு எதிரான இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளின் காரணமாகவே இந்த பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக சர்வதேச சமூகம் கருதுகிறது. சுதந்திரமான பாலஸ்தீன் நாட்டை அமைத்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்பது உலக மக்களின் கருத்தாக இருக்கிறது.

இந்த தாக்குதல் சம்பவங்கள் காரணமாக 1,500 க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். பல்வேறு உலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளனர். ஹமாஸ் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட போரை நிறுத்திக்கொள்ளுமாறும், அப்பாவி பொதுமக்களை பாதுகாக்குமாறும் கேட்டுக்கொண்டு உள்ளன. பாலஸ்தீன் மீது தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் பிரதமர் அறிவித்து உள்ள நிலையில், இஸ்ரேல் பாலஸ்தீன் மீது முன்னெச்சரிக்கை இன்றி நடத்தும் ஒவ்வொரு தாக்குதலின்போதும் ஒரு இஸ்ரேலிய கைதியை தூக்கிலப்போவதாக ஹமாஸ் அறிவித்து உள்ளது. காசாவை சுற்றி வளைக்க 3 லட்சம் பேரை இஸ்ரேல் அழைத்து உள்ளது." என்று குறிப்பிட்டு உள்ளது.
இந்த போர் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் நிலைபாடுகளுக்கு எதிராகவும் வடகொரியா கருத்து தெரிவித்து இருக்கிறது. குறிப்பாக சர்வதேச விவகாரங்கள் அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வட கொரியா கண்டித்து இருக்கிறது. மேலும் சிரியாவில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலின் காரணமாக அந்நாட்டில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டு இருக்கும் நிலையில், இதற்கு சிரியாவுக்கு உள்ளேயும், வெளியிலும் உள்ள விரோத சக்திகளே காரணம் என வட கொரிய ஊடகம் குறிப்பிட்டு உள்ளது.
சிரியாவின் அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆட்சியை அகற்றுவதற்காக நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பாலஸ்தீனின் பெரும்பகுதி நிலத்தை அமெரிக்கா, பிரிட்டன் உதவியுடன் கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வந்த இஸ்ரேல் எஞ்சி இருக்கும் காசா, ஜெருசலேன், மேற்கு கரை பகுதிகளை கைப்பற்ற தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதுடன், சமீபத்தில் இஸ்லாமியர்களின் புனித தலமான அல் அக்சா மசூதியை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை 5000 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா மீது கடந்த சில நாட்களாக இடைவிடாத தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்து இருக்கும் நிலையில், பாலஸ்தீனுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலை வட கொரியா கண்டித்து இருப்பது பியாங்யாங்: இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே இன்று 5 வது நாளாக போர் தொடர்ந்து வரும் நிலையில், வடகொரியா இது தொடர்பாக கருத்து தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து வடகொரிய ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகமான ரோடாங் சின்முன் வெளியிட்டு உள்ள செய்தியில், "பாலஸ்தீனுக்கு எதிரான இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளின் காரணமாகவே இந்த பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக சர்வதேச சமூகம் கருதிகிறது. சுதந்திரமான பாலஸ்தீன் நாட்டை அமைத்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்பது உலக மக்களின் கருத்தாக இருக்கிறது.
இந்த தாக்குதல் சம்பவங்கள் காரணமாக 1,500 க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். பல்வேறு உலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளனர். ஹமாஸ் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட போரை நிறுத்திக்கொள்ளுமாறும், அப்பாவி பொதுமக்களை பாதுகாக்குமாறும் கேட்டுக்கொண்டு உள்ளன. பாலஸ்தீன் மீது தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் பிரதமர் அறிவித்து உள்ள நிலையில், இஸ்ரேல் பாலஸ்தீன் மீது முன்னெச்சரிக்கை இன்றி நடத்தும் ஒவ்வொரு தாக்குதலின்போதும் ஒரு இஸ்ரேலிய கைதியை தூக்கிலப்போவதாக ஹமாஸ் அறிவித்து உள்ளது. காசாவை சுற்றி வளைக்க 3 லட்சம் பேரை இஸ்ரேல் அழைத்து உள்ளது." என்று குறிப்பிட்டு உள்ளது.
இந்த போர் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் நிலைபாடுகளுக்கு எதிராகவும் வடகொரியா கருத்து தெரிவித்து இருக்கிறது. குறிப்பாக சர்வதேச விவகாரங்கள் அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வட கொரியா கண்டித்து இருக்கிறது. மேலும் சிரியாவில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலின் காரணமாக அந்நாட்டில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டு இருக்கும் நிலையில், இதற்கு சிரியாவுக்கு உள்ளேயும், வெளியிலும் உள்ள விரோத சக்திகளே காரணம் என வட கொரிய ஊடகம் குறிப்பிட்டு உள்ளது.
சிரியாவின் அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆட்சியை அகற்றுவதற்காக நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பாலஸ்தீனின் பெரும்பகுதி நிலத்தை அமெரிக்கா, பிரிட்டன் உதவியுடன் கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வந்த இஸ்ரேல் எஞ்சி இருக்கும் காசா, ஜெருசலேன், மேற்கு கரை பகுதிகளை கைப்பற்ற தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதுடன், சமீபத்தில் இஸ்லாமியர்களின் புனித தலமான அல் அக்சா மசூதியை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை 5000 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா மீது கடந்த சில நாட்களாக இடைவிடாத தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்து இருக்கும் நிலையில், பாலஸ்தீனுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலை வட கொரியா கண்டித்து இருப்பது
-
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications