அணு ஆயுதங்கள் தயார் நிலையில் இருக்கட்டும் - வடகொரிய ராணுவத்திற்கு அதிபர் கிம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சியோல்: வடகொரியா ராணுவம் விரைவில் அணு ஆயுதத் தாக்குதலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த ஜனவரி 6 ஆம் தேதி சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்தியது.

இதைத் தொடர்ந்து அந்த நாட்டின் மீது ஐ.நா.சபை அண்மையில் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது.

பகிரங்க எச்சரிக்கை:

பகிரங்க எச்சரிக்கை:

இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா நேற்று முன்தினம் தென்கொரியாவுக்கு அருகே 6 ஏவுகணைகளை கடலில் வீசியது. இது தென்கொரியா மற்றும் அதன் நட்பு நாடான அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அணு ஆயுதத் தாக்குதல்:

அணு ஆயுதத் தாக்குதல்:

இந்தப் பின்னணியில் அணு ஆயுத தாக்குதலை நடத்த தயார் நிலையில் இருக்குமாறு ராணுவ உயரதிகாரிகளுக்கு வடகொரியா அதிபர் ஜிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார்.

அச்சுறுத்தும் அமெரிக்கா:

அச்சுறுத்தும் அமெரிக்கா:

இதுதொடர்பாக அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ, "வடகொரியாவின் இறை யாண்மை, ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் ராணுவ வலிமையை கண்டு வடகொரியா அஞ்சாது.

சமாளிக்கவே முன்னெச்சரிக்கை:

சமாளிக்கவே முன்னெச்சரிக்கை:

மக்களின் பாதுகாப்பு, எதிரி நாடுகளுடன் ராணுவ சமநிலையைப் பேணவே அணுஆயுதம், ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறோம். எத்தகைய அச்சுறுத்தல்களையும் சமாளிக்கும் வகையில் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அதிபர் உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+