அதிகரிக்கும் தற்கொலைகள்.. வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் போட்ட ரகசிய உத்தரவு.. என்னனு பாருங்க!
பியாங்யாங்: வடகொரியாவில் தற்கொலைக்கு தடை விதித்து அந்த நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார். வடகொரியாவில் தற்கொலை செய்து கொள்பவரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 40 சதவிகிதம் உயர்ந்துள்ள நிலையில், இந்த உத்தரவை கிம் ஜாங் உன் பிறப்பித்துள்ளார்.
உலகின் மர்ம தேசமாக அறியப்படும் நாடு வடகொரியா. வடகொரியாவில் என்ன நடக்கிறதே என்று வெளி உலகிற்கு தெரியாது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் கடும் மோதல் போக்கை கையாண்டு வருபவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். அந்த நாட்டில் என்ன நடக்கிறது, மக்களின் வாழ்க்கை முறை எப்படி உள்ளது என்பது கூட அந்த நாட்டிற்கு மட்டுமே வெளிச்சம்.

ஊடகங்களுக்கு கட்டுப்பாடு, சமூக வலைத்தளங்களுக்கு அனுமதி இல்லை என சர்வாதிகார ஆட்சியை அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் நடத்தி வருகிறார். அதுபோக சிறிய குற்றங்களுக்கு கூட மிகக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். அதுமட்டும் இன்றி எந்த மாதிரியான உடை அணிய வேண்டும். முடிகள் இப்படித்தான் வெட்ட வேண்டும் என்பதில் கூட பல கட்டுப்பாடுகள் வடகொரியாவில் உள்ளதாம்.
கிம் ஜாங் உன்னின் தந்தை இறந்த தினம் வந்தால் அன்றைய தினம் யாரும் சிரிக்கக் கூடாது என்ற அளவுக்கு பல விசித்திரமான கட்டுப்பாடுகள் அந்த நாட்டில் உள்ளன. அதுபோக வெளிநாட்டு சினிமாக்கள் பார்ப்பதற்கு தடை.. குறிப்பாக கொரிய சீரியல்கள் பார்ப்பதற்கு கூட நாட்டு மக்களுக்கு அனுமதி கிடையாது. இப்படி பல வினோதமான கட்டுப்பாடுகளையும் அடாவடியான உத்தரவுகளையும் விதிக்கும் வடகொரியா, கடுமையான பஞ்சத்தால் தவித்து வருவதாக சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
வடகொரியா ஒருபக்கம் கடுமையான பஞ்சத்தில் தவித்து வந்தாலும் தொடர்ந்து அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனை என ஏவுகணைகளை சோதித்து அடாவடி காட்டி வருகிறார் கிம் ஜாங் உன். கடுமையான பசி, பஞ்சத்தால் மக்கள் தவித்து வரும் நிலையில், வடகொரியாவில் மக்கள் தற்கொலை செய்து கொள்வது கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 40 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக தென்கொரிய உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக தென்கொரிய உளவு அமைப்புகள் கூறும் போது, " வடகொரியாவில் உள்நாட்டில் கடும் குழப்பமான மற்றும் அமைதியின்மை நிலவுகிறது. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 40 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இதனால், மக்கள் தற்கொலை செய்வதை தடுக்கும் வகையில் ரகசிய உத்தரவை அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார்" என்று கூறியதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்கொலை செய்து கொள்வது சோசலிசத்திற்கு எதிரானது என்ற அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications