பயிர்கள் அழியாமல் பாதுகாக்க விதைக்களஞ்சியத்திற்கு நார்வே 13 மில்லியன் டாலர் முதலீடு!
ஓஸ்லோ: பருவ நிலை மாற்றத்தால் அழிவை நோக்கி வரும் உணவுப் பயிர்கள் பாதுகாப்பிற்காக ஆர்ட்டிக்கில் அமைக்கப்பட்ட உலக விதை களஞ்சியத்திற்கு நார்வே கூடுதலாக 13 மில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
பூமியில் போரினாலோ இயற்கை பேரழிவுகளாலோ உணவு பயிர்கள் அழியாமல் பாதுகாக்க ஸ்வால்பார்ட் உலக விதை களஞ்சியம் நிரந்தர பனிமண்டலமான ஆர்டிக்கில் 2008 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
பூமிக்கு 400 அடி கீழே நிலக்கறி சுரங்கத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள இந்த விதைக் களஞ்சியமான கடந்த திங்கட்கிழமை தனது 10 வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. இங்கு சுமார் 1 மில்லியன் விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

நார்வே அரசின் நிதியுதவி
நார்வே அரசால் நிதியுதவி செய்யப்பட்டு இந்த விதைக் களஞ்சியமானது செயல்பட்டு வருகிறது. சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த விதைக்களஞ்சியத்தில் இருக்கும் விதைகளை கொடுத்து பயிர் செய்யும் சோதனை 2015ல் வெற்றியடைந்தது.

அழியாமல் பாதுகாக்கும் கிடங்கு
இங்கு நிலவும் நிரந்தர பனி காரணமாக, உலகின் ஏனைய கிடங்குகளில் விதைகள் அழிந்துபோனாலும் இங்கு அவை உயிர்ப்புடன் இருக்கும். உலகின் மிக முக்கிய உணவு ஆதாரங்களான உருளைக்கிழங்கு,நெல்,கோதுமை,பார்லி,கடலை,பருப்பு,முதலியவற்றின் விதைகள் இந்த களஞ்சியத்தில் பிராதானமாக சேமிக்கப்படுகிறது. இது வரை 100 நாடுகளில் இருந்து 20000 வகையான விதைகள் சேமிக்கப்பட்டிருக்கின்றன.

பல்வேறு நாடுகளில் இருந்து
இந்தியா, பாகிஸ்தான், லெபனான், மொரோக்கோ, நெதர்லாந்து, அமெரிக்கா,மெக்ஸிக்கோ, பெலாரஸ், போஸ்னியா,ஹெர்சிகோவினா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து புதிதாக சேர்க்கப்பட்ட 50000 விதைகளையும் சேர்த்து இப்போது உலக களஞ்சியத்தில் இருக்கும் விதைகளின் எண்ணிக்கை 940000 ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 4.5 மில்லியன் விதைகள்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட களஞ்சியம்
இந்த விதைக்களஞ்சியத்தின் வசதிகளை மேம்படுத்தும் விதமாக கூடுதலாக 13 மில்லியன் டாலர் முதலீடு செய்ய நார்வே அரசு திட்டமிட்டுள்ளது. ஓராண்டுக்கு முன்னர் பருவநிலை மாறுபாடு காரணமாக விதைக்களஞ்சியத்தை சுற்றி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கூடுதல் நிதி ஒதுக்கி இதன் வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பின் போது இங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த விதைகள் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications