மலேசிய விமானம் தாக்குதல் சம்பவம்: ரஷ்யா மீது ஒபாமா குற்றச்சாட்டு!
நியூயார்க்: 298 பயணிகளுடன் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்துக்கு ரஷ்யாவே காரணம் என்று அமெரிக்கா அதிபர் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார்.
நெதர்லாந்தில் இருந்து 298 பயணிகளுடன் மலேசியா வந்து கொண்டிருந்த விமானம் கிழக்கு உக்ரைன் வான்பரப்பில் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உடல் சிதறி உயிரிழந்தனர்.

உலகை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்கா அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கிழக்கு உக்ரைனில் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையால் மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. கிளர்ச்சியாளர்களின் நோக்கம் என்ன என்று இப்போதே யூகிக்க முடியவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக சர்வதேச நாடுகளுடன் பேசி வருகிறோம். இது ஒரு உலகளாவிய துயர சம்பவம். எனவே, இதுபற்றி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் இதை ஆதரிக்கிறது. எனவே, ரஷ்யா உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களையும் உடன்படச் செய்வோம். இந்த விசாரணை நடக்க வசதியாக, உக்ரைன் அரசும், கிளர்ச்சியாளர்களும் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும்.
விபத்து பகுதிக்குள் விசாரணை குழுவை அனுமதிக்க வேண்டும். ஆதாரங்களை அழிக்கக் கூடாது. கிளர்ச்சியாளர்கள், தரையில் இருந்து பாய்ந்து சென்று இலக்கை தாக்கவல்ல ஏவுகணையை பயன்படுத்தி உள்ளனர். இத்தகைய அதிநவீன ஏவுகணைகளை ரஷ்யாதான் அவர்களுக்கு கொடுத்தது.
அங்குள்ள சூழ்நிலையை ரஷ்யா அதிபர் புதினால் கட்டுப்படுத்த முடியும். ஆனால் அவர் அந்த அதிகாரத்தை பயன்படுத்த மறுக்கிறார்.
இச்சம்பவம் தொடர்பாக புதினுடன் நான் பேசியபோது, உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருவதால், அதன் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டதாக தெரிவித்தேன். உக்ரைனில் பதற்றத்தை தணிக்க தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுப்போம்.
இவ்வாறு ஒபாமா கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications