ஹோட்டலில் லைனுக்கு டிமிக்கி கொடுத்த ஒபாமாவால் 2 பேருக்கு லஞ்ச் ஃப்ரீ ஃப்ரீ
ஆஸ்டின்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பிரபல உணவகம் ஒன்றில் வரிசையில் நிற்காமல் சென்று உணவு வாங்கியுள்ளார்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது அதிகாரிகள் குழுவுடன் டெக்சாஸ் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். அப்போது டெக்சாஸ் மாநில தலைநகரான ஆஸ்டினுக்கு சென்ற ஒபாமா செய்த ஒரு காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அது என்னவென்று பார்ப்போம்.

நிதி திரட்டுதல்
ஆஸ்டினில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஒபாமா ஜனநாயக கட்சிக்கு நிதி திரட்டினார்.

உணவகம்
நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஒபாமா ஆஸ்டின் நகரில் உள்ள பிரபல பிரான்க்ளின் பார்பிக்யூ உணவகத்திற்கு சென்றார்.

வரிசை
பிரான்க்ளின் உணவகத்தில் எப்பொழுதும் கூட்டம் அதிகமாக இருக்கும். மதிய வேளையில் பசியுடன் சென்ற ஒபாமா வரிசையில் நின்றார். பின்னர் தனக்கு முன் நின்ற 2 பேரை முந்திக் கொண்டு உணவு வாங்க சென்றுவிட்டார்.

இலவச உணவு
தான் வரிசையில் நிற்காமல் சென்றதால் ஒபாமா தனக்கு முன்பு நின்று கொண்டிருந்த 2 பேருக்கும் தனது செலவில் உணவு வாங்கிக் கொடுத்தார்.

ரூ.18,000
ஒபாமா தனக்கு, அந்த 2 பேருக்கு மற்றும் அதிகாரிளுக்கு உணவு வாங்கினார். அவர் மொத்தம் ரூ.18 ஆயிரத்துக்கு உணவு வாங்கினார்.

ஒபாமா
பிரான்க்ளின் கடையில் வரிசையை முந்திச் சென்று உணவு வாங்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒபாமா அதிபர் என்பதால் அனுமதிக்கப்பட்டார் என்று கடை உரிமையாளரான ஆரன் பிரான்க்ளின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications