உலகின் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: அமெரிக்கா உறுதி
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப் பயணமாக சென்றுள்ள நரேந்திரமோடி, அங்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் இரு நாட்டு தொழில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்த, வெள்ளை மாளிகைக்கான மீடியா செயலாளர் ஜோஷ் எர்னஸ்ட், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பு நாடு அந்தஸ்து தருவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் செயலாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறியதாவது: இந்திய பிரதமர் நரேந்திரமோடியும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், இரு நாட்டு தொழில் வளர்ச்சிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அதிக வாய்ப்பை உருவாக்குவதற்கும், அமெரிக்காவில் வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கும், இந்த சந்திப்பில் முக்கியத்துவம் தரப்படும்.
அமெரிக்காவில் தொழில் தொடங்க முன்வரும் இந்திய தொழிலதிபர்களுக்கும், உரிய வசதிகள் செய்துதரப்படும். இரு நாடுகளுக்கும் நல்லது நடைபெற வேண்டும் என்பது இத்தலைவர்கள் சந்திப்பின் நோக்கம்.
2010ம் ஆண்டு, ஓபாமா முதல்முறையாக இந்தியா சென்றபோதே, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்றார். அதே நிலைப்பாட்டில்தான் அமெரிக்கா இப்போதும் உள்ளது. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகள் கட்டமைப்பை மாற்றியமைக்க ஐ.நா சம்மதித்துள்ளது நாம் அறிந்ததே.
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. அதன் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் தொடர்ந்து சென்று கொண்டுள்ளது. உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த சூழ்நிலையில், பன்னாட்டு நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு கூடுதல் பொறுப்பை வழங்குவதுதான் சரியானதாக இருக்க முடியும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications