தென்னாப்பிரிக்கா: பாறையில் கிடைத்த 73,000 ஆண்டுகள் பழமையான ஓவியம்
மனித குலத்தின் மிகப் பழமையான ஓவியத்தை தென்னாப்பிரிக்காவிலுள்ள மிகச் சிறிய பாறை துண்டின் மீது கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 73,000 ஆண்டுகள் பழமையான ஓவியமாக கருதப்படும் இது, ஒரு கல்லின் மீது குறுக்குக்கோடு போன்று சிவப்பு நிற களிமண் கலவையை கொண்டு வரையப்பட்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் தெற்கு கடலோர பகுதியிலுள்ள ப்லோம்போஸ் என்ற குகையில் கிட்டத்தட்ட ஹேஸ்டேக் (#) வடிவில் காணப்படும் அந்த ஓவியத்தின் சிறு துண்டை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பு மனித குலத்தின் "நவீன அறிவாற்றலின் ஒரு பிரதான உதாரணம்" என்று விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பழமையான ஓவியங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்தாலும், தற்போது கண்டறியப்பட்டுள்ள ஓவியம்தான் ஆதிகால அருவ ஓவியம் என்று நேச்சர் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாறையின் மீது இந்த ஓவியத்தை வரைவதற்கு "களிமண்ணால் செய்யப்பட்ட நிறமியை வண்ணம் தீட்டும் கோல்" கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூமியில் இயற்கையாக காணப்படும் ஒச்ரே என்னும் களிமண் நிறமியை சுமார் 2,85,000 ஆண்டுகளாக மனிதர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஓவியம் "மிகவும் சிக்கலானதாக" இருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய தொல்பொருள் ஆய்வாளர் கிறிஸ்டோபர் ஹென்ஷில்வுட் கூறினார்.
"கண்டெடுக்கப்பட்ட கல்லின் மீதுள்ள குறுக்குக்கோடுகள் ஒழுங்கன்றி முடிவடைவது இந்த ஓவியத்தின் பரப்பு மிகப் பெரிய அளவில் இருந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது" என்று அவர் மேலும் கூறுகிறார்.
இந்த தொல்பொருள் ஆராய்ச்சி குழுவின் தலைவரான கிறிஸ்டோபர், நார்வே மற்றும் தென்னாப்பிரிக்காவிலுள்ள பல்கலைக்கழங்களில் பணிபுரிந்து வருகிறார்.
ராய்ட்டர்ஸிடம் பேசிய விஞ்ஞானிகள், இந்த ஓவியத்தை "கலை என்று அழைக்கவே தயங்குவதாகவும்", ஆனால் "ஏதோ ஓர் அர்த்தத்துடனே இதை உருவாக்கியிருக்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகருக்கு கிழக்கே சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ப்லோம்போஸ் குகையில் சிவப்பு நிற களிமண்ணால் சுற்றப்பட்ட மணிகள், செதுக்கப்பட்ட களிமண் துண்டுகள் ஆகியனவும், 1,00,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சாயம் தயாரிக்கும் தொகுப்பும் கண்டறியப்பட்டுள்ளது.
அறிவியலில் ஹோமோசெபியன்ஸ் என்றழைக்கப்படும் தற்கால மனிதர்கள், தற்போதைய ஆஃப்பிரிக்காவில் 3,15,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாக பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் கூறப்படுகிறது.
நைஜீரியாவின் மழை மனிதர்கள்
https://www.youtube.com/watch?v=a5pkAYh_mAQ&t=1s
பிற செய்திகள்:
- அமெரிக்கா: ஃபுளோரன்ஸ் சூறாவளியின் வேகம் குறைந்தாலும் ஆபத்து குறையவில்லை
- இனி கைபேசிகளுக்கு சிம் கார்டே தேவையில்லை; எப்படி வேலை செய்கிறது இ-சிம்?
- வேள்பாரி: 50 ஆண்டுகளுக்கு பின் வரலாறு படைத்த புனைகதைத் தொடர்
- 'இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது - ஆனால் அது மட்டும் போதுமா?'
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி














Click it and Unblock the Notifications