மியான்மர்: பச்சை மாணிக்கக் கல் வெட்டும் சுரங்கத்தில் நிலச்சரிவு.. 70 பேரின் நிலை என்ன?
யாகூன்: மியான்மரின் வடக்கு பகுதியில் பச்சை நிற மாணிக்கக் கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தொழிலாளர் பலியாகிவிட்டார். நூற்றுக்கணக்கானோர் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர்.
சீன எல்லையில் மியான்மரில் கச்சின் மாகாணத்தில் பாகந்த் என்ற இடத்தில் பச்சை நிற மாணிக்கக் கல் வெட்டும் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.
குறைந்த அளவு ஊதியத்தில் இவர்கள் பணியாற்றி வருவதாக சொல்லப்படுகிறது. மிகவும் லாபகரமான தொழிலாக உள்ள நிலையில் இங்கு ஆண்டுதோறும் பலர் இறக்கிறார்கள்.

சீனா
இந்த மாணிக்கத்தை அண்டை நாடான சீனா மிகவும் விரும்புவதாக சொல்லப்படுகிறது. உலகில் கிடைக்கும் பச்சை நிற மாணிக்கக் கற்களில் 90 சதவீதத்தை மியான்மர் தயாரிக்கிறது. கடந்த பிப்ரவரியில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து மோதல்கள் வெடித்தது.

பொருளாதார நெருக்கடி
அது போல் கொரோனாவால் பொருளாதார பிரச்சினைகளை மக்கள் சந்தித்ததாலும் பண தேவைக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் இது போன்ற ஆபத்தான சுரங்கங்களில் புலம்பெயர்ந்த மக்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த ஆட்சி கவிழ்ந்து விட்டு ராணுவ ஆட்சி நடைபெறுவதால் அபாயகரமான மற்றும் சட்டவிரோத சுரங்கங்களில் சீர்திருத்தம் கொண்டு வரும் வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.

பச்சை நிற மாணிக்கக் கற்கள்
இந்த நிலையில் பச்சை நிற மாணிக்கக் கற்களை வெட்டும் சுரங்கத்தில் இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 25 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்த சுரங்கத்தில் பணிபுரிந்து வந்த 70 முதல் 100 பேரின் நிலை என்னவென தெரியவில்லை.

200 மீட்பு படையினர்
200-க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் அருகில் ஏரி இருப்பதால் அங்கு படகுகளுடன் மீட்பு குழுவினர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டும் மழை வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டு இந்த சுரங்கத்தில் 170 பேர் கொல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications