ஜெர்மனி விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு காக்பிட்டுக்கு வெளிய வைத்து பூட்டப்பட்ட விமானி
பாரீஸ்: ஜெர்மன்விங்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு விமானி அறையில் ஒரு விமானி மட்டுமே இருந்துள்ளார்.
ஸ்பெயினில் இருந்து 150 பேருடன் ஜெர்மனிக்கு சென்ற ஜெர்மன்விங்ஸ் நிறுவன விமானம் பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர்.
விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் விமானி அறையில் நடந்த பேச்சுவார்த்தை பதிவாகியுள்ளது. அதன்படி விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு விமானி ஒருவர் விமானியின் அறையில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

இது குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
வெளியே சென்ற விமானி மீண்டும் அறைக்குள் நுழைய கதவை லேசாக தட்டியுள்ளார். ஆனால் பதில் இல்லை.
பின்னர் கதவை வேகமாக தட்டியுள்ளார். அப்போதும் பதில் இல்லை. அறைக்குள் இருந்த விமானி பதிலே அளிக்கவில்லை.
அதில் இருந்து விமானம் விழுந்து நொறுங்கியது வரை வேறு எந்த சப்தமும் பதிவாகவில்லை. அறைக்குள் இருந்த விமானி ஏன் கதவை திறந்துவிடவில்லை என்பது குழப்பமாக உள்ளது. விமானி எதற்காக அறையை விட்டு வெளியே சென்றார் என்றும் தெரியவில்லை என்றார்.
இருப்பினும் இந்த விமான விபத்திற்கு தீவிரவாதிகள் காரணமாக இருக்க முடியாது என்று பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தின் கேப்டன் 10 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications