இனி, ‘வெங்காயம்’னு திட்டுனா சந்தோஷப் படுங்க பாஸ்...
அப்ரகா: வெங்காயத்தில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கரைக்கும் ரசாயனப் பொருள் இருப்பதாக நைஜீரிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
முட்டாள் தனமான செயல்களைச் செய்பவர்களை ‘வெங்காயம்' எனத் திட்டுவதுண்டு. ஏனெனில் வெங்காயத்தில் தான் உரிக்க உரிக்க கடைசியில் ஒன்றுமே இருக்காது. அதைப் போலவே முட்டாள்களுக்கு மூளையே இல்லை என்பதைக் குறிப்பதைப் போல் இவ்வாறு திட்டப்படுகிறது.
ஆனால், நைஜீரிய ஆய்வு ஒன்று வெங்காயத்தின் ரசாயன குணங்கள் குறித்து ஆய்வு செய்து, அதன் அருமையான மருத்துவக் குணங்களை வெளியிட்டுள்ளது.

டெல்டா ஸ்டேட் ஆய்வு...
நைஜீரியாவின், அப்ரகா நகரில் உள்ள டெல்டா ஸ்டேட் பல்கலைக் கழகம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.

சர்க்கரை அளவு குறையும்...
இந்த ஆய்வின் படி, வெங்காய சாறை குடித்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது எனக் கண்டுபிடிக்கப் பட்டது. அதேபோல், கொழுப்பு சத்தும் கரைகிறது எனத் தெரிய வந்துள்ளது.

அதிக கலோரியில்லை...
வெங்காயத்தின் ரசாயன குணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் ஓஜே. இவர் தங்களது ஆய்வு தொடர்பாக கூறுகையில், ‘வெங்காயம் அதிக கலோரிகள் கொண்ட ஒரு உணவுப் பொருள் அல்ல.

பசியைத் தூண்டுகிறது...
இருப்பினும், மனித உடலின் வளர்சிதை மாற்றத்தை வெங்காயம் ஒழுங்குபடுத்துகிறது. பசியை தூண்டுகிறது,' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications