கண்ணிமைக்கும் நேரத்தில் சுனாமியை கூட ஏற்படுத்தும் பயங்கர ஆயுதம்... இரண்டே நாடுகளிடம் தான் இருக்கு!
மாஸ்கோ: இந்தியா பாகிஸ்தான் மோதலில் பாகிஸ்தானின் அனைத்து ட்ரோன்களையும் இந்தியா காலி செய்தது. இதையடுத்து இப்போது உலகெங்கும் ராணுவங்களிடம் உள்ள அதிநவீன ஆயுதங்கள் குறித்து விவாதங்கள் நடந்து வருகிறது. அப்படி தான் ஒரு ஆயுதம் குறித்து நெட்டிசன்கள் தீவிரமாக விவாதித்து வருகிறார்கள். உலகிலேயே இரு நாடுகளிடம் மட்டுமே இருக்கும் இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தினால் சுனாமி கூட வரும் ஆபத்து இருக்கிறதாம்.
இந்தியா பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த மோதலில் இந்தியா பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்த விவாதம் இணையத்தில் நடந்து வருகிறது. மேலும் உலகெங்கும் ராணுவங்களிடம் உள்ள அதிநவீன ஆயுதங்கள் குறித்து விவாதங்கள் நடந்து வருகிறது.

அதிநவீன ஆயுதம்
அப்படி இணையத்தில் அதிகம் விவாதிக்கப்படும் ஆயுதங்களில் ஒன்று, பயன்படுத்தப்பட்டால் சுனாமியை கூட ஏற்படுத்தக்கூடும். இந்த ஆயுதம் இப்போது உலகிலேயே இரண்டு நாடுகளிடம் மட்டுமே இருக்கிறதாம். அதில் ஒன்று இந்தியாவின் நீண்ட கால நண்பராகும். அப்படி என்ன ஆயுதம். இந்தியாவின் எந்த நட்பு நாட்டிடம் அந்த ஆயுதம் உள்ளது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ரஷ்யா
இந்தியாவின் நீண்டகால நண்பரான ரஷ்யா தான் அந்த நட்பு நாடு. ரஷ்யாவிடம் அணுசக்தியால் இயங்கும் நீருக்கு அடியில் பாய்ந்து சென்று தாக்கக்கூடிய போஸிடான் என்ற ஆயுதம் இருக்கிறது. கடந்த 2015ல் ரஷ்யா முதலில் இது தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் வெளியானது.. அதை அப்போது "ஸ்டேட்டஸ்-6 ஓசியானிக் மல்டி பர்பஸ் சிஸ்டம்" என்று குறிப்பிட்டு இருந்தனர்.
போஸிடான் என்றால் என்ன?
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், போஸிடான் என்பது நீருக்கு அடியில் பயணிக்கும் ஒரு வகை ட்ரோன் ஆகும். இந்த போஸிடானால் அணு ஆயுதங்களைக் கூட எடுத்துச் செல்ல முடியும். கடந்த 2015ம் ஆண்டிலேயே இது குறித்த தகவல்கள் வெளியானாலும் 2018ல் தான் இதை ரஷ்ய அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தார். இது ரஷ்யாவின் ஆறு புதிய சூப்பர் ஆயுதங்களில் ஒன்று எனச் சொல்லி அறிமுகப்படுத்தினார்..
கடந்த 2022 மே மாதம் இந்த ஆயுதம் தொடர்பாக ரஷ்யா ஊடகம் ஒரு செய்தி வெளியிட்டது. அதாவது இந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டால் 500 மீட்டர் உயரத்தில் கதிரியக்கத்துடன் கூடிய சுனாமி ஏற்படலாம் என்றும் இதனால் ஒட்டுமொத்த பிரிட்டனும் கூட நொடிகளில் மூழ்கிவிடும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
சுனாமி கூட ஏற்படும்
போஸிடான் என்பது ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தியால் இயங்கும் ஒரு ட்ரோன் ஆயுதம். அது நீருக்கு அடியில் பயணிக்கும் என்பதால் மற்ற ஆயுதங்களை விட இது வேகத்தில் குறைவாகவே இருக்கும். அதேநேரம் ஒரு முறை ஏவப்பட்டால் அதை நிறுத்துவது கடினம். எதிரிகள் நினைத்தாலும் நிறுத்தவே முடியாது. இந்த போஸிடான் 10,000 கிமீ தூரம் வரை சென்று தாக்கக் கூடியது. 1000 மீட்டர் ஆழத்திலும் இயங்கும். மேலும், அதன் 100 வாட் வேகத்தில் பாயும்.
ஒரு போஸிடான் இரண்டு அணு ஆயுதத்தைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும். அது கடலில் வெடித்தால் அதீத ஆற்றல் வெளிப்படும். இதனால் கதிரியக்க சுனாமி ஏற்படவும் கூட வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
வடகொரியா
அடுத்து இதுபோல ஆபத்தான ஆயுதம் கொண்ட நாடு வடகொரியா.. கடந்த 2024 ஜனவரி மாதம் வட கொரியா ஜப்பான் கடலில் நீருக்கு அடியில் அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் ஒரு புதிய ஆயுத அமைப்பைச் சோதித்தது. 'ஹால்-5-23' என இந்த ஆயுதத்தை வடகொரியா சோதனை செய்ததால் அப்போது இந்தோ-பசிபிக் பகுதியில் பதற்றம் அதிகரித்தது. அதற்குப் பதிலடியாக அப்போது அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
நீருக்கு அடியில் அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் வடகொரியாவின் இந்த ஆயுதமும் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தும் திறன் கொண்டது. மேலும், சுனாமி போன்ற அலைகளை உருவாக்கும் திறன் கொண்டது. இருப்பினும், இது ரஷ்யாவின் போஸிடான் அளவுக்கு வலிமையானது இல்லை எனச் சொல்லப்படுகிறது.
-
கிம் ஜாங் உன்னை தூக்கும் டிரம்ப்? Decapitation வெறியில் அமெரிக்கா.. அடுத்த டார்க்கெட்டில் வடகொரியா? -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேரையும் போட்டுடைத்த க்ளீடன் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
“ஒரு டான்ஸ் ஆடியது குத்தமா.. அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்.. என்ன இப்படி ஆகிடுச்சு -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இந்தியாவுக்கு வெடி வைத்த டிரம்ப்! அமெரிக்காவால் நமக்கு தொட்டதெல்லாம் நஷ்டம் தான்! -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
இந்த ரெக்கார்டு போதுமா?இன்னும் கொஞ்சம் வேணுமா! பல ஆண்டு ரொக்கார்டுகளை சல்லி சல்லியாக உடைத்த SKY படை! -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில்












Click it and Unblock the Notifications