பஞ்சம்...பசி...பட்டினி - உள்நாட்டுப் போரால் தத்தளிக்கும் 7,600 சூடான் குடும்பங்கள்!
கர்துாம்: ஆப்ரிக்க நாடான தெற்கு சூடானில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் நடந்து வரும் உள்நாட்டு சண்டையின் காரணமாக 7,600 குடும்பங்கள் பட்டினியால் தவிக்கின்றன.
அங்கு தொடர்ந்து நடைபெறும் மனித உரிமை மீறல்களால், மனிதாபிமான உதவிகளை செய்து வந்த தொண்டு நிறுவனங்களும் பணியை தொடரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

"ஆப்ரிக்காவின் இருதயம்" என அழைக்கப்படும் சூடான் நாட்டிலிருந்து 2011 ஜூலை 9 ஆம் தேதி பிரிந்து தெற்கு சூடான் உருவானது. இது உலகின் 196 ஆவது நாடாக ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
எத்தியோப்பியா, காங்கோ, கென்யா, உகாண்டா ஆகிய நாடுகள் இதன் எல்லைகளாக உள்ளன. இதன் பரப்பளவு 2,47,000 சதுர கி.மீ, 2008ம் ஆண்டு கணக்கின் படி இந்நாட்டின் மக்கள் தொகை 82 லட்சம். எழுத்தறிவு 15 சதவீதம். நாட்டின் மொத்த வருவாயில் 98 சதவீதம் எண்ணெய் மூலம் கிடைக்கிறது.
இந்நிலையில் தற்போது அதிபராக இருக்கும் சல்வா கிர், முன்னாள் துணை அதிபரும், தற்போது கிளர்ச்சியாளர்களின் தலைவராக இருக்கும் ரிக் மச்சார் ராணுவப் புரட்சி செய்து ஆட்சியை பிடிக்க சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை துவங்கியது. இது உள்நாட்டு போராக மாறியது. குழந்தைகளைக் கூட இருதரப்பும் சண்டையில் ஈடுபடுத்தியது. உள்நாட்டு போரின் காரணமாக மக்களுக்கு அடிப்படை வசதிகளான உணவு, நீர், இருப்பிடம் கூட கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகிள்ளனர்.மேலும் இந்த உள்நாட்டு சண்டையால் 19 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்தது. 45 லட்சம் பேருக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிக்கை தெரிவிக்கிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications