5 ஆண்டுகளில் 8500 பேர் பலி.. பாகிஸ்தானில் கொடி கட்டிப் பறக்கும் தீவிரவாதம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தீவிரவாதத் தாக்குதல்களால் கடந்த 5 ஆண்டுகளில் 8500 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் எல்லைப் பகுதி பழங்குடியின மாகாணங்களில்தான் அதிக அளவிலான ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். அதாவது 1487 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2224 பேர் காயமடைந்துள்ளனர்.
8500 பேரில் பொதுமக்களும், பாதுகாப்புப் படையினரும் அடக்கம். இதுதொடர்பான விவரத்தை பாகிஸ்தான் உள்துறை வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் 5532 பேர்
கொல்லப்பட்டவர்களில் அப்பாவி மக்கள் 5532 பேர் ஆவர். காயமடைந்தவர்கள் 10,195 பேர். பாதுகாப்பு படையினர் 3157 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்த பாதுகாப்புப் படையினர் எண்ணிக்கை 5988 ஆகும்.

பழங்குடியினர் பகுதிகளில்
பழங்குடியினர் பகுதிகளில்தான் அதிக அளவிலான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். அதாவது 1487 பேர். காயமடைந்தோர் எண்ணிக்கை 2224 பேர். எல்லைப் பகுதியில் கொல்லப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கை 1470 பேர் ஆவர். காயமடைந்தோர் 2761 ஆகும்.

தீவிரவாதிகள் 3759 பேர்தான்
அதேசமயம், அப்பாவி மக்கள், பாதுகாப்புப் படையினரை விட தீவிரவாதிகள்தான் குறைந்த அளவில் கொல்லப்பட்டுள்ளனர். 3759 பேர்தான் கொல்லப்பட்டுள்ளனர்.இதில் எல்லைப் பகுதியில் 2530 பேர் கொல்லப்பட்டனர். 90 பேர் பஞ்சாப் மாகாணத்தில் கொல்லப்பட்டனர். 342 பேர் சிந்து மாகாணத்திலும், 351 பேர் கைபர் பக்துன்வாலாவிலும், 435 பேர் பலுசிஸ்தானிலுிம், 7 பேர் இஸ்லாமாபாத்திலும், 3 பேர் பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரிலும், ஒருவர் கில்ஜிட் -பல்திஸ்தான் பகுதியிலும் கொல்லப்பட்டுள்ளனர்.

மரண தண்டனை
பாகிஸ்தானில் இந்தக் கால கட்டத்தில் 173 தீவிரவாதிகள் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் தூக்குத் தண்டனைக்காக காத்துள்ளனர்.

2001 முதல் இதுவரை 55,000 பேர் பலி
அதேசமயம், 2001ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்தது. அது முதல் இதுவரை 55,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications