மருத்துவ நோபல் பரிசு வென்றவரின் மனைவி இந்தியர்!
Recommended Video

ஹூஸ்டன்: மருத்துவத்துக்கான நோபல் பரிசு வென்றுள்ள அமெரிக்கர் ஜேம்ஸ் ஆலிசனின் மனைவி பத்மானி சர்மா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.
2018ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஆலிசன் மற்றும் ஜப்பானின் டசகு ஆகியோர் இணைந்து இதைப் பெறுகின்றனர். இருவரும் புற்றுநோய் சிகிச்சையில் புதிய உத்தியைக் கண்டுபிடித்தமைக்காக இந்த விருதைப் பெறுகின்றனர்.

இந்த நோபல் பரிசில் இந்தியர்களுக்கும் ஒரு சின்ன சந்தோஷம் உள்ளது. அதாவது ஆலிசனின் மனைவி வம்சாவளி இந்தியர் ஆவார். இவரும் ஒரு புற்று நோய் சிகிச்சை நிபுணர்தான். ஆலிசனும், பத்மானியும் ஹூஸ்டனில் உள்ள எம்ஜி ஆண்டர்சன் புற்று நோய் கழகத்தில் பணியாற்றுகின்றனர்.
பத்மானியும் ஒரு புற்றுநோய் சிகிச்சை நிபுணர்தான். இவரது பூர்வீகம் மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள கயானா ஆகும். இவரது வம்சவாளி இந்தியா. பெற்றோரில் தந்தை இந்தியர், தாயார் கயானாவைச் சேர்ந்த முஸ்லீம் ஆவார். 10 வயது வரை குடும்பம் கயானாவில் வசித்தது. அதன் பிறகு குடும்பத்துடன் நியூயார்க்குக்கு இடம் பெயர்ந்தார் பத்மானி. அதன் பிறகு அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றார்.
ஆலிசனும் சரி, பத்மானியும் சரி புற்றுநோய் சிகிச்சை மருத்துவத்தில் சிறந்து விளங்குபவர்கள். இருவரும் ஒரே மருத்துவமனையில் பணியாற்றுவதோடு, இருவரும் இணைந்து பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர். பல்வேறு புகழ் பெற்ற மருத்துவக் குழுக்களில் இடம் பெற்றுள்ளனர்.
[ சபரிமலை செல்ல விரும்பும் பெண்களை தடுக்க முயல்கிறதா தேவசம் போர்டின் புதிய விதிமுறைகள்? ]
ஆலிசனின் குடும்பத்தில் ஒரு பெரும் சோகம் உண்டு. அவரது தாயார் புற்று நோய்க்குப் பலியானவர் ஆவார். அதேபோல ஆலிசனின் சகோதரரும் புற்றுநோய்க்கு இரையானவர். இதுவும் கூட ஆலிசனை, புற்றுநோய் சிகிச்சை குறித்த ஆய்வுகளில் ஈடுபடத் தூண்டியதாம்.
உலகின் மிகப் பெரிய மிரட்டலாக இன்று உருவெடுத்து நிற்கிறது புற்றுநோய். அதன் ஒழிப்பு மற்றும் சிகிச்சையில் முன்னோடிகளாக உள்ள தம்பதி ஆலிசன்- பத்மானி. இந்த வகையில் இந்தியராக நாமும் கூட பெருமை கொள்ளலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications