பாக்.: 15 வயது மாணவியை கடத்தி, பலாத்காரம் செய்த நவாஸ் ஷரீப் கட்சி நிர்வாகி தலைமறைவு- 6 பேர் கைது
லாகூர்: பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷரீப் கட்சி நிர்வாகி உள்பட 7 பேர் 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தலைநரான லாகூரைச் சேர்ந்தவர் மியான் அத்னான். ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகி. லாகூர் நகரின் சப்சாசர் ஹவுசிங் காலனியில் வசிக்கும் 15 வயதான பத்தாம் வகுப்பு மாணவி வெள்ளிக்கிழமை அன்று தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது மியான் அந்த மாணவியை கடத்தி ஹோட்டல் ஒன்றுக்கு கொண்டு சென்றுள்ளார். ஹோட்டல் அறையில் வைத்து மாணவியை மியான் மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்து, சித்ரவதை செய்துள்ளனர்.
இது குறித்து மாணவி போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான மியான் மட்டும் தலைமறைவாக உள்ளார்.
இதற்கிடையே மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷரீப் லாகூர் உயர் போலீஸ் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications