இனி அப்துல் பாசித்-தான் இந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதர்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராக அப்துல் பாசித் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை சல்மான் பஷீர் தூதராக இருந்து வந்தார். பஷீர், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஆவார்.
அடுத்த மாதத் தொடக்கத்தில் பாசித் பதவியேற்பார் என்று தெரிகிறது. கடந்த 1982ம் ஆண்டு பாகிஸ்தான் வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்தவர் பாசித். பல்வேறு பாகிஸ்தான் தூதரகங்களில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்திலும் பணியாற்றியுள்ளார்.

2012 முதல் ஜெர்மனியில் பாகிஸ்தான் தூதராக இருந்து வந்தார். தற்போது இந்தியாவுக்கு வருகிறார்.
இந்தியாவுடனான உறவுளை வலுப்படுத்த நவாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு தீவிர ஆர்வம் காட்டி வரும் சூழலில் தூதரை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications