Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முற்றும் மோதல்! இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கியாஸ் - தண்ணீர் கட் செய்த பாகிஸ்தான்! மீண்டும் போர்?

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானை பந்தாடியது. உயிருக்கு பயந்து காலில் விழுந்து போரை நிறுத்தியது பாகிஸ்தான். ஆனாலும் பாகிஸ்தான் திருந்தவில்லை. ஒருபுறம் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் அமெரிக்காவில் இருந்து கொண்டு அணுஆயுத தாக்குதல் நடத்துவதாக மிரட்டி உள்ளார். மறுபுறம் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்துக்கான செய்தித்தாள், இந்திய தூதரக அதிகாரிகளிடம் வீடுகளுக்கான கியாஸ், தண்ணீர் சப்ளை நிறுத்தி துன்புறுத்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. இருநாடுகள் இடையே மோதல் முற்றும் நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கவராதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 26 அப்பாவிகள் இறந்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானை நம் படை வீரர்கள் பந்தாடினர். ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள், ராணுவ தளங்கள், விமானப்படை தளங்கள் ஏவுகணைகள் மூலமாக அழிக்கப்பட்டன.

pakistan asim munir india

குறிப்பாக பிரம்மோஸ் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நிலைக்குலைந்த பாகிஸ்தான் நம் நாட்டிம் மண்டியிட்டு அடிமைப்போல் சரணடைந்தது. எங்களால் அடியை தாங்க முடியவில்லை. இனி தாக்குதல் நடத்தமாட்டோம். எங்களை விட்டு விடுங்கள் என்று பாகிஸ்தான் ராணுவ அதிகாரி நம் ராணுவத்திடம் கெஞ்சினார்.

இதையடுத்து தான் மே 7 ம் தேதி தொடங்கிய போர் மே 10ம் தேதி மாலையில் நிறுத்தப்பட்டது. இருப்பினும் தற்போதும் இருநாடுகள் இடையே பதற்றம் என்பது நீடித்து வருகிறது. இதனால் ‛ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் முடியவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே தான் தான் நம் நாட்டை சீண்டும் வேலையில் பாகிஸ்தான் இறங்கி இருக்கிறது.

பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் தற்போது அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அவர் அணுஆயுத மிரட்டல் விடுத்துள்ளார். பாகிஸ்தான் அழியும் நிலை வந்தால் உலகின் 50 சதவீத நாடுகளை அழித்து விடுவோம் என்று வாய்ச்சவடால் விட்டுள்ளார். மேலும் நம் நாட்டுக்கு தொடர்ந்து வரிகளை விதித்து வரும் டொனால்ட் டிரம்ப் பயங்கரவாதிகளை வளர்த்து விடும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்கிறார். இந்தியா அசீம் முனீருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்தியாவை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வார்னிங் செய்துள்ளது.

இதற்கிடையே தான் பாகிஸ்தானை வைத்து டிரம்ப் நம் நாட்டுக்கு எதிராக சதி வேலையில் இறங்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதற்கிடையே தான் தற்போது இன்னொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாகிஸ்தானில் உள்ள நம் நாட்டின் தூதரக அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டுள்ளனர். நம் நாட்டின் தூதரகம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ளது.

இந்நிலையில் தான் தூதரகத்துக்கு நியூஸ் பேப்பர் சப்ளையை பாகிஸ்தான் நிறுத்தி உள்ளது. அதேபோல் தூதரக அதிகாரிகள் வசிக்கும் இல்லங்களுக்கான கியாஸ், தண்ணீர், நியூஸ் பேப்பர் சப்ளையை துண்டித்து அடாவடி காட்டி உள்ளது. தூதரக அதிகாரிகளின் வீடுகளுக்கு குழாய் மூலமாக கியாஸ் சப்ளை வழங்கப்பட்டு வந்த நிலையில் அது நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சிலிண்டர்களை இந்திய அதிகாரிகளுக்கு விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நம் நாடு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. இதன் காரணமாக தான் இந்திய தூதரக அதிகாரிகளின் இல்லம் மற்றும் இந்திய தூதரக அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை துண்டிக்கும் வேலையில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு நம் நாடு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தூதரகங்களின் சீரான செயல்பாடு, ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் கண்ணியத்தை உறுதிசெய்யும் வியன்னா உடன்படிக்கை விதிகளை மீறும் வகையில் இருக்கிறது. ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான் இடையே இருக்கும் பலவீனமான உறவை இன்னும் சிக்கலாக்கும் என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி இந்தியாவும் பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. அதன்படி டெல்லியில் உள்ள பாகிஸ்தானின் தூதரகத்துக்கான நியூஸ் பேப்பர் சப்ளையை நம் நாடு நிறுத்தி உள்ளது. மேற்கொண்டு பாகிஸ்தான் அடாவடி செய்தால் அதற்கு பதிலடி கொடுக்க நம் நாடும் முழுவீச்சில் தயாராக வருகிறது. இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+