பாகிஸ்தானில் பேருந்தில் குண்டுவெடிப்பு: குழந்தைகள் உள்பட 11 பேர் பலி, 22 பேர் படுகாயம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் குண்டு வெடித்ததில் 2 குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகினர், 22 பேர் காயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இருக்கும் பேருந்து நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை இரவு பயணிகளுடன் பேருந்து ஒன்று கிளம்ப இருந்தது. அப்போது திடீர் என்று பேருந்தில் இருந்த குண்டு வெடித்ததில் 2 குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகினர், 22 பேர் காயம் அடைந்தனர்.

பலியானவர்களில் பெரும்பாலானோர் கூலி வேலை செய்பவர்கள் என்றும், காயம் அடைந்தவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பலுசிஸ்தான் மாகாண ஐ.ஜி. அல்மிஷ் கான் கூறுகையில்,
பேருந்தின் மேற்கூரை மீது இருந்த பயணிகளின் உடைமைகளோடு வைக்கப்பட்டிருந்த டைமர் குண்டு வெடித்துள்ளது. அந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் இந்த பேருந்து தான் கடைசியாக கிளம்பும் என்பதால் அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்த நினைத்துள்ளனர் என்றார்.
பலியானவர்களில் பலர் பேருந்தின் பின்புறம் இருந்த இருக்கைகள் மற்றும் மேற்கூரையில் அமர்ந்திருந்ததாக டாக்டர் நூர் பலோச் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பலுசிஸ்தான் மாகாண முதல்வர் டாக்டர் மாலிக் பலோச் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பலுசிஸ்தானில் நிலவி வரும் அமைதியை சீர்குலைக்கும் முயற்சி இது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications