பாகிஸ்தானில் பேருந்தில் குண்டுவெடிப்பு: குழந்தைகள் உள்பட 11 பேர் பலி, 22 பேர் படுகாயம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் குண்டு வெடித்ததில் 2 குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகினர், 22 பேர் காயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இருக்கும் பேருந்து நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை இரவு பயணிகளுடன் பேருந்து ஒன்று கிளம்ப இருந்தது. அப்போது திடீர் என்று பேருந்தில் இருந்த குண்டு வெடித்ததில் 2 குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகினர், 22 பேர் காயம் அடைந்தனர்.

பலியானவர்களில் பெரும்பாலானோர் கூலி வேலை செய்பவர்கள் என்றும், காயம் அடைந்தவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பலுசிஸ்தான் மாகாண ஐ.ஜி. அல்மிஷ் கான் கூறுகையில்,
பேருந்தின் மேற்கூரை மீது இருந்த பயணிகளின் உடைமைகளோடு வைக்கப்பட்டிருந்த டைமர் குண்டு வெடித்துள்ளது. அந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் இந்த பேருந்து தான் கடைசியாக கிளம்பும் என்பதால் அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்த நினைத்துள்ளனர் என்றார்.
பலியானவர்களில் பலர் பேருந்தின் பின்புறம் இருந்த இருக்கைகள் மற்றும் மேற்கூரையில் அமர்ந்திருந்ததாக டாக்டர் நூர் பலோச் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பலுசிஸ்தான் மாகாண முதல்வர் டாக்டர் மாலிக் பலோச் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பலுசிஸ்தானில் நிலவி வரும் அமைதியை சீர்குலைக்கும் முயற்சி இது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications